கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.கூடவே பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
’காலா’ வை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராக் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த படம் கட்டாயம் அமையும் என்று இயக்குனர் கார்க்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜலிங்கில் வெற்றிக்கரமாக முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்டப் பட்டப்பிடிப்பு டெராடூனில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதில் நடிகை சிம்ரன் கலந்துக் கொண்டுள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிமர்டன் நடிப்பதாகவும், ரஜினியின் மகனாக பாபி சிம்ஹா நடித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல் ரஜினியுடன் சண்டை போட (படத்தின் வில்லனாக) பாலிவுட் இறக்குமதியான நவாஸுதீன் சித்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை சிம்ரன் முதன்முறையாக ரஜினியுடன் படத்தில் ஜோடி சேருவது குறிப்பிடத்தக்கது. பி. வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா ஆகியோர் நடித்த்கிருந்த சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்திற்கு முதலில் சிம்ரனிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/2-43.jpg)
ஆனால் பல்வேறு காரணங்களால் அப்போது அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது இதை நினைத்து வருத்தம் அடைவதாக சிம்ரன் பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனால் இம்முறை அவரின் நீண்ட நாள் ஆசையான ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது நடந்துள்ளது.