நாட்டுப்புற பாடல்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஜோடி பேட்டி ஒன்றில் தங்களது பிள்ளைகள் குறித்து பேசியுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நாட்டுப்புற பாடல்கள் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கிலும் பாப்புலர் ஆன ஜோடி செந்தில் கணேஷ் ராஜலட்சுமி. அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து பாடிய என்ன மச்சான் சொல்லு புள்ள என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலை சார்லி சாப்ளின் 2 என்ற படத்திலும் பாட வாய்ப்பை பெற்று தந்தது.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவருமே பங்கேற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இந்த நிகழ்ச்சியே அவர்களின் வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடக்கும் கச்சேரிகளில் பாடிவரும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இருவரும், சினிமாவிலும் பல பாடல்களை பாடியுள்ளனர்.
இதில் செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது. அதே சமயம் புஷ்பா படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை பாடி ராஜலட்சுமி புகழ்பெற்றார். இந்நிலையில், செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஜோடி தங்களது பிள்ளைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது.
இதில் பிள்ளைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த செந்தில் கணேஷ் ரெண்டு பிள்ளைகளுக்குமே என்னை ரொம்ப பிடிக்கும். நான் மீசை தாடியை முறுக்கிவிட்டால் என் மகனுக்கு பிடிக்காது உடனே கலைச்சிடுவான். ஏன்னா அவனுக்கு இன்னும் மீசை தாடி வரலையாம். எனறு சொல்கிறார். அதேபோல் வெளியில் சென்றுவிட்டால் வீடியோ கால் பேசும்போது மீசையை முறுக்கி விட்டால் மகன் என்னிடம் கம்லைண்ட் பண்ணுவான் என்று ராஜலட்சுமி கூறியுள்ளார்.
அதன்பிறகு பேசும் செந்தில் கணேஷ் என் பிள்ளைகளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவர்கள் இருவருமே என் ஹீரோ என்று சொல்வார்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“