Advertisment

மெட்ரோ பணி உதவி மேலாளரை தாக்கியதாக புகார்: பாடகர் வேல்முருகன் கைது

புகாரின் பேரில் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகனை இன்று (மே 13) கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Sing velmuru.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகார்டு போட்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் இரவு 11 மணியளவில் அவ்வழியாக வந்த பின்னணி பாடகர் வேல்முருகன் பேரிகார்டை நகர்த்திவிட்டு காரில் செல்ல முயன்றுள்ளார்.

Advertisment

இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு, இந்த வழியில் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த அந்த மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவம்  தொடர்பாக உதவி மேலாளர் வடிவேலு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகனை இன்று (மே 13) கைது செய்தனர்.  ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின் அவரை போலீசார் ஜாமினில் விடுவித்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment