/indian-express-tamil/media/media_files/2025/08/19/screenshot-2025-08-19-183148-2025-08-19-18-32-01.jpg)
முந்தானை முடிச்சுஎன்பது 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும், இது கே. பாக்யராஜ் எழுதி இயக்கியது , இவர் ஊர்வசியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்தப் படம் பரிமளா என்ற குறும்புக்கார கிராமத்துப் பெண், கிராமத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் ஒரு விதவையைக் காதலிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. அவர் தன்னுடன் உடலுறவு கொண்டதாக பொய்யாகக் குற்றம் சாட்டி அவரை மணக்கிறார், ஆனால் அவரது காதலை வெல்ல அவள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த படத்தை கிண்டலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாராட்டியதாக பாகியராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
"தாவணிக்கனவுகள் கதையை எழுதி முடித்தவுடன், அந்தக் கதையில் ஒரு ஓய்வு பெற்ற மிலிட்டரி ஆபீசர் கேரக்டர் இடம் பெற்று இருந்தது. அந்த கேரக்டரை நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் வாழ்வது போல வடிவமைத்து இருந்தேன்.
அந்த கேரக்டரில் நடிகர் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இதனையடுத்து அவரிடம் கதை சொல்ல சென்றேன்.
என்னை பார்த்தவுடன் அவர் வா பாக்கி... என்று ஏற்கனவே நான் அவருக்கு பரிச்சயமானவர் போல பேசினார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் பாக்கி என்று அழைக்க மாட்டார்கள்.
இதனையடுத்து நான் அவருக்கு கதையை விவரித்தேன் கதை அவருக்கு பிடித்திருந்தது. படம் செய்யலாம் என்று ஒத்துக் கொண்டார்.
அன்றைய சந்திப்பில் இன்னொரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது. அவர் என்னை பார்த்து... பாக்கி நீ ரொம்ப மோசம் என்றார். சிவாஜி சார் அப்படி சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே ஓடவில்லை.
உடனே நான் அவரிடம் இப்போதுதான் நான் உங்களை முதன்முறையாக பார்க்கிறேன். பார்க்கும் பொழுதே இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். அதற்கு அவரோ, ஆமாம் நீ எங்கள் வீட்டுப் பெண்களையெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறாய் என்றார். தொடர்ந்து பேசிய அவர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்தார்.
ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் நான் இயக்கிய 'முந்தானை முடிச்சு' படத்திற்கு சென்று இருக்கிறார்கள். சரி வீட்டில்தான் யாருமில்லையே... என்று சொல்லி அவர் கீழே அமர்ந்து இருந்திருக்கிறார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் எங்கே சென்று இருந்தீர்கள் என்று சிவாஜி கேட்க, அவர்கள் முந்தானை முடிச்சு என்று சொன்னதோடு, படம் ஆபாசபடம் போல இருப்பதாக சொல்லி முகம் சுளித்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் அந்தப்படத்தை அவர்கள் பார்க்கச் சென்று விட்டார்கள். அந்த நாளும் சிவாஜி கீழே காத்திருக்க... எல்லோரும் வந்து இருக்கிறார்கள்.
இதைப்பார்த்த சிவாஜி எல்லாரையும் கலாய்த்து தள்ளியிருக்கிறார். அதற்காகதான் அவர் என்னை அப்படி சொல்லி இருக்கிறார்."
என்று பாக்கியராஜ் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவாஜி கணேசன் மிகவும் நல்ல மனிதர் என்றும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.