எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாட்டு; எம்.ஜி.ஆர் ஸ்டைல் நடிப்பு: தயங்கியபடியே செய்த சிவாஜி கணேசன்

எம்.ஜி.ஆரை புகழும் வரிகளைக் கொண்ட பாடல்; எம்.ஜி.ஆர் ஸ்டைலிலே அதனைச் சொல்லக் கேட்ட இயக்குனர்; முதலில் தயங்கினாலும் பின்னர் சிறப்பாகச் செய்த சிவாஜி; எந்த பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆரை புகழும் வரிகளைக் கொண்ட பாடல்; எம்.ஜி.ஆர் ஸ்டைலிலே அதனைச் சொல்லக் கேட்ட இயக்குனர்; முதலில் தயங்கினாலும் பின்னர் சிறப்பாகச் செய்த சிவாஜி; எந்த பாடல் தெரியுமா?

author-image
WebDesk
New Update
MGR Sivaji

எம்.ஜி.ஆரை புகழும் வரிகளைக் கொண்ட பாடல்; எம்.ஜி.ஆர் ஸ்டைலிலே அதனைச் சொல்லக் கேட்ட இயக்குனர்; முதலில் தயங்கினாலும் பின்னர் சிறப்பாகச் செய்த சிவாஜி; எந்த பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆரை புகழும் வரிகளை பாடியதோடு மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆர் ஸ்டைலிலும் சிவாஜி நடித்த பாடல் உருவான சுவாரஸ்ய நிகழ்வை இப்போது பார்ப்போம்.

Advertisment

இதுதொடர்பாக, இதயக்கனி யூடியூப் சேனலில், ஆசிரியர் விஜயன் தெரிவித்திருப்பதாவது; சத்யா மூவிஸ் தயாரிப்பில் சிவாஜி நடித்தப் படம் புதிய வானம். சிவாஜியுடன் சத்யராஜ் மற்றும் ரூபினி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இது சிவாஜியின் 275 ஆவது படமாகும். மேலும் சத்யா மூவிஸில் சிவாஜி நடித்த ஒரே படமும் இதுதான்.

இந்தப் படத்தில் உள்ள பாட்டில் தான் எம்.ஜி.ஆர் ஸ்டைலி சிவாஜி நடித்திருப்பார். சத்யராஜின் குழந்தையை சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் உற்சாகப்படுத்துவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கும். ’பாடல் கேட்கிறேன், பாடல் சொல்கிறேன்’ என்ற இந்த பாடலில் உள்ள சில வரிகள் சிவாஜிக்கு சந்தேகத்தை எழுப்பியது.

’எளிமையும், மனப்பொறுமையும், புரட்சித்தலைவர் ஆக்கும் உன்னை’ என்ற வரிகள் குழந்தையை நோக்கி சிவாஜி பாடுவதாக அமைந்தது. இதனையடுத்து சிவாஜி இயக்குனர் உதயகுமாரிடம், இந்த வரிகள் சரியாக வருமா? நான் சொல்வது பொருத்தமாக இருக்குமா? ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று சந்தேகம் எழுப்பினார்.

Advertisment
Advertisements

ஏனெனில், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் போட்டி போட்டு நடித்த காலத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் போட்டியுடன் தான் இருக்கிறார்கள். அப்போது உதயக்குமார், நீங்கள் இருவரும் போட்டியுடன் நடித்த காலம் என்றாலோ அல்லது எம்.ஜி.ஆர் தற்போது உயிருடன் இருந்தாலோ, நீங்கள் இப்படி கேட்பது நியாமாக இருக்கலாம். எம்.ஜி.ஆர் தற்போது அமரராகி, எல்லோருக்கும் பொதுவான தலைவர் ஆகிவிட்டார்.

எனவே நீங்கள் இப்போது இப்படி பாடுவதானால் எந்தக் குறைபாடும் இருக்காது. ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ரசிகர்களுக்கு ரசனையை உருவாக்குவது நாம் தான், எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என சிவாஜியை சமாதானப்படுத்துகிறார்.

அப்போது சிவாஜி, சத்யராஜிடம் நீ எம்.ஜி.ஆர் ரசிகர் தானே, நீயே இந்த வரிகளை பாடிவிடு என்று கூறுகிறார். இல்ல, அது உங்களோட வரி, நீங்களே பாடிடுங்க என்று சத்யராஜ் மறுக்கிறார். சிவாஜியும் ஒரு வழியாக ஏற்றுக்கொள்கிறார்.

அப்போது இயக்குனர் உதயகுமார் அடுத்த விஷயத்தை கூறுகிறார். அதாவது சிவாஜியிடம், நீங்கள் உங்கள் ஸ்டைலில் நடிக்காமல், எம்.ஜி.ஆர் ஸ்டைலில் நடிக்க வேண்டும் என்று கேட்கிறார். இதைக்கேட்டு அதிரும் சிவாஜி, அப்படி நடிக்க தயங்குகிறார். பின்னர் உதயகுமார் சமாதானம் செய்து சிவாஜியை நடிக்க வைக்கிறார். இப்படி எம்,ஜி,ஆர் ஸ்டைலில் சிவாஜி நடித்தவாறு பாடல் வெளியானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mgr Sivaji Ganesan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: