/indian-express-tamil/media/media_files/2025/09/17/download-37-2025-09-17-09-49-01.jpg)
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படம் திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வந்த இப்படம், ரசிகர்களிடையே சிலரிடத்தில் நல்ல விமர்சனமும், சிலரிடத்தில் விமர்சனங்களும் பெற்றது. ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயனை வெளிப்படுத்தியதும், ஏ.ஆர். முருகதாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியதும் காரணமாக, சிவகார்த்திர்க்கேயனின் ரசிகர்கள் இந்த படத்தை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான 'மதராஸி' படம், எதிர்பார்த்த மாதிரியாக ரசிகர்கள் வரவேற்பை பெற முடியவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி இணையத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதன்படி, அக்டோபர் 2-ஆம் தேதி 'மதராஸி' ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னமும் இதுக்குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் கூட்டணி அமைத்த 'மதராஸி' படத்தில் வித்யூத் ஜாம்வால், ருக்மணி வசந்த், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்துக்கு இசையமைத்து இருந்தார்.
இந்த படம் தனது திரையரங்கு ஓட்டத்தை முதல் நாளில் சுவாரஸ்யமாகத் தொடங்கியது, இந்தியா முழுவதும் ₹13.65 கோடி வசூலித்தது. இந்த அபாரமான தொடக்கத்திற்கு அதன் முக்கிய தமிழ் பேசும் பார்வையாளர்கள் தான் முக்கிய பங்களிப்பை அளித்தனர், அவர்கள் ₹12 கோடி பங்களித்தனர், தெலுங்கு-டப்பிங் பதிப்பு ₹1.55 கோடியை கூடுதலாக வசூலித்தது. முக்கிய வெளியீடுகளைப் போலவே, படம் அதன் முதல் வார இறுதியில் மீதமுள்ள நாட்களை விட சற்று சரிவைக் கண்டது, சனிக்கிழமை ₹12.1 கோடியையும் ஞாயிற்றுக்கிழமை ₹11.4 கோடியையும் வசூலித்தது. இது முதல் வார இறுதி வசூலை மிகவும் ஆரோக்கியமான ₹37.15 கோடியாக கொண்டு வந்தது.
அதன் இரண்டாவது வெள்ளிக்கிழமை ₹1.8 கோடி மட்டுமே வசூலித்தது, இது பத்து நாள் மொத்த வசூலை ₹56.70 கோடியாக உயர்த்தியது. இரண்டாவது சனிக்கிழமை 61% அதிகரித்து ₹2.9 கோடியாகவும், அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ₹3 கோடியாகவும் சற்று அதிகரித்து, வார இறுதியின் மொத்த வசூல் ₹7.8 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்க வகையில் பலவீனமாக இருந்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய 'மதராஸி'வில் எஸ்கே முழுமையாக ஆக்ஷன் காட்சிகளில் இறங்கி ரசிகர்களை மந்திரமாய்ச் செய்தார். மேலும், வித்யூத் ஜாம்வால் நடித்த சண்டை காட்சிகளும் அதிகம் பாராட்டுப் பெற்றன. இப்படி பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும், மற்றொரு பக்கம் திரைக்கதை சுமாராக இருப்பதாக கலவையான விமர்சனங்களையும் 'மதராஸி' பெற்றது. இருந்த போதும், படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்தது
இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வாக அறிவித்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் பெரியளவில் வசூலை குவிக்கவில்லை. கடைசியாக எஸ்கே நடிப்பில் வெளியான 'அமரன்' மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியான 'அமரன்' ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் தற்போது 'மதராஸி' ரூ. 100 கோடி கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது.
எஸ்கே நடிப்பில் வரும் அடுத்த படம் 'பராசக்தி' ஆகும், இது அவருடைய 25வது படம். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் ரவி மோகன் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா, ஸ்ரீலீலா, ராணா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்பொழுது, இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.