திராவிட ஜீவா, கட்டுரையாளர்
தமிழ் சினிமாவில் ரஜினிக்குப்பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதாவது ஆறிலிருந்து அறுபதுவரை ஆண்கள் பெண்கள் என இருதரப்பு ரசிகர்களையும் மிகக்குறுகிய காலத்தில் தனது நடிப்பால் வசீகரப்படுத்தி வைத்திருக்கும் இளம் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கமர்ஷியல்கிங் என்றும் விநியோகஸ்தர்களால் அழைக்கப்படுகின்றார். கொரோனா காலத்தில்கூட தியேட்டருக்கு ஆடியன்ஸை வரவழைத்த மந்திர வித்தைக்கு சொந்தக்காரர் இவர். சினிமாவில் சாதாரண எந்தவித பின்புலமும் இல்லாமல் வசதியும் இல்லாமல் ரஜினி, விக்ரமுக்குப் பிறகு திறமையால் மட்டுமே நுழைந்த நடுத்தரக் குடும்பத்து பிள்ளை. பாலிவுட்பாஷா ஷாருக்கானைப்போல சின்னத்திரையில் இருந்து சில்வர் ஸ்க்ரீனுக்கு மாறிய தென்னகத்து ஷாருக்கானாக கொண்டாடப்படுகின்றார். கனவுக்கதாநாயக பிம்பத்தை உடைத்து சகோதரனாக தமிழ் பெண்களிடத்தில் சங்கமித்திருக்கும் சரித்திரத்தை படைத்திருக்கின்றார் சிவகார்த்திகேயன் என்று சொன்னால் அது மிகையாகாது.
இவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்ற பிறகும் தன் நிலை மாறாமல் இருக்கின்றார் என்று அவருடன் ஆரம்பத்தில் பணிபுரிந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் சினிமா நண்பர்கள் வரை சொல்வது ஆச்சர்யமளிக்கும் அதேவேளையில், தனது சொந்த ஊரில் தனது தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவர்களின் மூன்று தலைமுறை உறவினர்களை சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை அவர்களின் வசதியை எல்லாம் பொருட்படுத்தாது தேடிச்சென்று அவர்களை இன்ப அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளார். அவர்களிடம் தன்னை ஒரு நடிகனாக அடையாளப்படுத்தாமல் அவர்களில் ஒரு மனிதனாக எந்தவித விளம்பரமும் இல்லாமல் சந்தித்துள்ளார். யாரிடமும் சொல்லாமல் அதில் சிலருக்கு உதவிகளையும் செய்துள்ளார் என்று அவர் வட்டாரங்கள் உறுதியான தகவல்களைத் தெரிவிக்கின்றன.
ஊரில் சொந்தமாக வீடு வசதி என்று வந்துவிட்டாலே வேறு திசையில் பயணிக்கும் இந்த காலத்தில் நள்ளிரவிலும் புகைப்படக்காரர்களையும் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் சோசியல் மீடியா கிங் என்று விளம்பரம் தேடும் இந்த நவீன நாடக உலகில் பழமை மாறா பண்பாட்டை பாதுகாக்கும் சிவகார்த்திகேயன் சினிமா சீமராஜா அல்ல நிஜத்திலேயே சீமராஜாதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"