நடிகர் எஸ்.ஜே. சூர்யா தனது அடுத்த படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்க இருக்கிறார். அதற்காக ரஜினிகாந்தை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோவை முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அமிதாப் பச்சனுடன் எஸ்.ஜே. சூர்யா:
திருசெந்தூர் முருகன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பைவ் எலமெண்ட் புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் உருவாகிறது. இந்த படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இந்திய சினிமாவில் உச்சத்தை எட்டியுள்ள நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இவருடன் இணைந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். அதன் போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
August 2018
மேலும், இந்த போஸ்டரை ஃப்ரேம் போட்டு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். படக்குழுவினர் அனைவரும் ரஜினியை சந்தித்து படம் குறித்து கூறினர். பின்னர் போஸ்டரை அவர் கையில் கொடுத்து ஆசிர் பெற்றுக்கொண்டார் எஸ்.ஜே. சூர்யா. இதன் வீடியோவை அவர் வெளியிட்டார்.
August 2018
இந்த பதிவில், “தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில், இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிப்பது பெரிய பாக்கியம். இதர்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இந்த படத்திற்காக எனக்கு ஆசிர்வாதம் அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி. எப்படி நியூஸ் சும்மா அதிருதுல” என்றார்.