Advertisment

என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.. பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!

இதிலிருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. துணையாக இருக்கும் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.. பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!

தமிழில் காதலர் தினம் படத்தின் மூலம் ரோஜாவாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரேவின் மனதை உருகும் பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

இயக்குனர் கதிர் இயக்கக்த்தில் தமிழில் வெளியான திரைப்படம் தான் காதலர் தினம். ஏ.ஆர் ரகுமான் இசையில் இந்த படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் இன்று வரை பலரின் ஃபேவரெட். இந்த திரைப்படத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டு சென்றவர் தான் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே.

பம்பாய், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற் ஒரு சில தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது நடன நிகழ்ச்சிகள் மற்றும் டிவி ஷோக்களில் மட்டும் கலந்துக் கொண்டு வந்தார். இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி வெளியிட்ட பதிவு திரைநட்சித்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

43 வயதாகும் சோனாலி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுக்குறித்து அவரே உருக்கமாக தெரிவித்துள்ளார். “ சில நேரங்களில் நீங்கள், வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. ஆனால் என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. சிறிய வலி தான் வந்தது. அதை மருத்துவரிடம் சென்று சோதித்த பிறகு தான் அது புற்று நோய் என்று தெரிந்தது.

Sometimes, when you least expect it, life throws you a curveball. I have recently been diagnosed with a high grade cancer that has metastised, which we frankly did not see coming. A niggling pain led to some tests, which led to this unexpected diagnosis. My family and close friends have rallied around me, providing the best support system that anyone can ask for. I am very blessed and thankful for each of them. There is no better way to tackle this, than to take swift and immediate action. And so, as advised by my doctors, I am currently undergoing a course of treatment in New York. We remain optimistic and I am determined to fight every step of the way. What has helped has been the immense outpouring of love and support I’ve received over the past few days, for which I am very grateful. I’m taking this battle head on, knowing I have the strength of my family and friends behind me.

A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on

முதலில் அதிர்ச்சி அடைந்தேன். பின்பு அதனுடன் போராட தயார் ஆகிவிட்டேன். வலி தரும் பல சோதனைகள் செய்யவேண்டிய உள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளேன். தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வருகிறேன். இதிலிருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. துணையாக இருக்கும் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

சோனாலியின் இந்த உருக்கமான பதிவை பார்த்த பலரும், முண்ணனி நடிகர்கள், நடிகைகளும் அவருக்கும் ஆதரவான பல கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். அவரின் உடல்நலம் தேர இறைவனிடன் பிராத்திபதாக ட்விட்டர் கூறி வருகின்றன்ர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment