Sonam Kapoor Ahuja: கலைஞர்கள் தங்களை திரைப்படம் மற்றும் திரைப்பட விருந்துகளில் மட்டும் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது என நடிகை சோனம் கபூர் அஹுஜா கூறியுள்ளார். மாறாக, அடிக்கடி பயணிக்க வேண்டும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும், புத்தகங்களைப் படிக்க வேண்டும் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும், என்பது சோனத்தின் கருத்து.
"நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால், முழு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். படைப்புத் துறைக்கு தொடர்பானவர்கள் அடிக்கடி பயணிக்க வேண்டும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தகங்களைப் படிப்பது, திரைப்படங்களைப் பார்ப்பது, அருங்காட்சியகங்களுக்கு சென்று வருவது முக்கியம்" என திரையுலக கலைஞர்கள் தங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் சோனம் கபூர்.
மேலும் தொடர்ந்த அவர், ”கலைஞர் தங்களை திரைப்படங்களிலும் திரைப்பட விழாக்களிலும் மட்டும் ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் உங்கள் உலகம் சிறியதாகிவிடும், அப்படியானால் உங்களின் சிறந்த பதிப்பாக உங்களால் இருக்க முடியாது. அதற்காக, நீங்கள் சரியான நேர நிர்வாகத்தை கையாள வேண்டும். நான் எனது நேரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறேன்" என்றார்.
”நேரம் மட்டுமே விலகிச் செல்லும் ஒரு பொருள். இது மிகவும் விலைமதிப்பற்றதும் கூட. நேரத்தை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் நேரத்தை வீணாக்காமல் இருப்பது முக்கியம்" எனவும் குறிப்பிட்டார் சோனம்.
இதற்கிடையே, தன் கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் மாலத்தீவில் விடுமுறையை கழித்த சோனம் கபூர் சமீபத்தில் மும்பை திரும்பினார். வந்ததும் விடுமுறையில் எடுத்துக் கொண்டப் படங்களை ‘மேஜிக்கல் மாலத்தீவு’ என டைட்டிலிட்டு, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். முழுக்க முழுக்க பீச்சில் எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது குறிப்பிடத் தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.