Advertisment

’தாத்தாவைப் போல் பேரன்’: செளந்தர்யா ரஜினிகாந்தின் நெகிழ்ச்சி பதிவு!

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருபுறம் ஒற்றைக் கண்ணோடு ’விருமாண்டி’ கமல், மறுபுறம் ’பேட்ட’ ரஜினி ஆகியோரின் படங்கள் இருந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Soundarya Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இதன் படபிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர், பத்திரிக்கையாளர்கள் செட்டை பார்வையிடுவதற்காக அழைக்கப்பட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருபுறம் ஒற்றைக் கண்ணோடு ’விருமாண்டி’ கமல், மறுபுறம் ’பேட்ட’ ரஜினி ஆகியோரின் படங்கள் இருந்ததாக பலரும் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொடங்கிவிட்ட நிலையில், ரஜினியின் படம் அங்கு ’மிஸ்’ ஆவது தெரிகிறது. இதனை கண்டறிந்த நெட்டிசன்கள் பலர், ரஜினியின் படத்தை ஏன் அகற்றினீர்கள் என சேனல் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, அழகான ஓர் தருணத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த். அதாவது ‘கபாலி’ படத்தில் தன் தந்தை ரஜினி நிற்பது போல, மகன் வேத் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தாத்தாவைப் போலவே பேரனும்” என அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment