நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, விசாகன் வணங்காமுடி என்பவரை சமீபத்தில் மறுமணம் புரிந்தார்.
முதல் திருமணத்தில் ஏற்பட்ட மணமுறிவுக்குப் பிறகு தனது வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கிய செளந்தர்யாவுக்கு, வேத் என்ற மகன் இருக்கிறார்.
விசாகனுடன் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்த நிலையில், தற்போது அவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ஒரு படம் வைரலாகி வருகிறது.
அந்தப் படத்தில், சௌந்தர்யாவின் மகன் வேத், விசாகனுடைய காலில் ஏறி குறும்பாக விளையாடுகிறார்.
… And that’s what a #Blessing looks like ❤️❤️❤️❤️???????????????????????????????????????????????? #MyBoys #MyLife #Ved #Vishagan #Grateful #Blessed #GodsAreWithUs pic.twitter.com/7IxrmqyL0u
— soundarya rajnikanth (@soundaryaarajni) 16 March 2019
இதனை ட்விட்டரில் பகிர்ந்த செளந்தர்யா, என் வாழ்க்கை, ஆசிர்வாதிக்கப்பட்டவள், கடவுள் எங்களுடன் இருக்கிறார் போன்றவற்றை ஹேஷ்டேக்காக குறிப்பிட்டுள்ளார்.