/tamil-ie/media/media_files/uploads/2022/10/Nayam.jpg)
Tamil news updates
திருமணமான 4 மாதத்தில் நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார். இது குறித்த அறிவிப்பை அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/wikki-nayan-14.jpg)
இது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை வீச, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா குறித்து புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டனர் என்றும், கடந்த டிசம்பர் மாதம் வாடகை தாய் ஒப்பந்தம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டனர் என்றும் அந்தத் தகவல் நீள்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Nayanthara-2.jpg)
இதற்கிடையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது சட்டப்பூர்வ நடடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், இது சமூக சீரழிவுக்கு வித்திடும், இதைப் பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. ஆகவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Nayan-4.jpg)
நயன்தாரா-விக்னேஷ் சிவன் குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
முன்னதாக, அமைச்சர் ம.சுப்பிரமணியன், நயன்தாரா-விக்னேஷ் சிவன் விஷயத்தில் தேவைப்பட்டால் இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்கப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.