‘பாலு எங்க போன? உலகம் சூனியமா போச்சு...’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா
பாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து, அவரது நீண்ட கால நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ‘பாலு எங்க போன? உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை’ என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து, அவரது நீண்ட கால நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ‘பாலு எங்க போன? உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை’ என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து, அவரது நீண்ட கால நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ‘பாலு சீக்கிரம் எழுந்து வா... எங்க போன? உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை’ என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Advertisment
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், இசை உலகத்தினர், ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு அவரது நீண்ட கால நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ‘பாலு எங்க போன? உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை’ என்று கூறி தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Advertisment
Advertisements
பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு அவருடைய நீண்ட நாள் நண்பர், இசையமைப்பாளர் இளையராஜா, வெளியிட்டுள்ள வீடியோவில், “பாலு சீக்கிரம் எழுந்துவா... உன்னை பாக்க நா காத்திருகேன்னு சொன்னேன். கேட்கல நீ கேட்கல... போய்ட்ட... எங்க போன? கந்தர்வர்களுக்கு பாடுறதற்காக போய்விட்டாயா? இங்க உலகம் ஒரு சூனியாமா போச்சு... உலகத்தில ஒன்னும் எனக்கு தெரில. பேசறதுக்கு பேச்சு வரலை... சொல்றதுக்கு வார்த்தை இல்லை. என்ன சொல்றதுனே தெரியல. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை.” உருக்கமாக பேசியுள்ளார்.
எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்தது. அப்போது, திரையுலகினர், ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டபோது, இளையராஜ பாலு சீக்கிரம் எழுந்துவா என்று கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"