Advertisment

'பயப்படுகிறவள் நான் இல்லை; நிரூபித்தால் ஆடை இல்லாமல் நடப்பேன்': சவால் விடும் ஸ்ரீரெட்டி

ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

author-image
WebDesk
New Update
Sri Reddy challenges to pawan kalyan  fans Tamil News

"நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்." என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Sri Reddy: தெலுங்கு திரையுலகில் பல முக்கிய நட்சத்திரங்களின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து கலங்கடித்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது.

Advertisment

இந்நிலையில், தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளதில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். 

எனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து எதையும் நான் நீக்கவில்லை. ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sri Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment