சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய ஸ்ரீரெட்டி

சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம், நள்ளிரவில் வீடு புகுந்து தன்னிடம் ரகளை செய்ததாக சில நாட்களுக்கு முன்பு போலீஸில் புகார் செய்தார்.

சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம், நள்ளிரவில் வீடு புகுந்து தன்னிடம் ரகளை செய்ததாக சில நாட்களுக்கு முன்பு போலீஸில் புகார் செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sri-reddy

வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை, தவறாக பயன்படுத்திக் கொள்வதாக திரைத்துறை பிரபலங்கள் மீது புகார் கூறி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

Advertisment

தெலுங்கு பிரபலங்கள் பலர் மீது குற்றம் சாட்டிய இவர், ராகவா லாரன்ஸ், நடிகர் நானி, இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக, தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாக புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம், நள்ளிரவில் வீடு புகுந்து தன்னிடம் ரகளை செய்ததாக சில நாட்களுக்கு முன்பு போலீஸில் புகார் செய்தார். இது திட்டமிட்ட நாடகம் எனக் கூறப்பட்டது.

தற்போது இதன் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மூன்று நபர்கள் சுற்றும் முற்றும் நன்றாகப் பார்த்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்து ஸ்ரீ ரெட்டியிடம் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதாக, அந்தக் காட்சியில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

Advertisment
Advertisements
Sri Reddy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: