/tamil-ie/media/media_files/uploads/2018/07/sri-reddy.jpg)
sri reddy
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முதல் அனைவரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார் நடிகை ஸ்ரீரெட்டி.
இதைத் தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீரெட்டி, உலக அளவில் டிரெண்ட் ஆனார். முதலில் அவரின் குற்றச்சாட்டுகள் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கினாலும், பின்னர் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.
இருப்பினும் அவ்வப்போது யாரையாவது பற்றி தனது முகநூலில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
இந்நிலையில் தற்போது தமிழின் முன்னணி நடிகர் ஒருவரைக் குறிப்பிட்டு, “உங்கள் கேரவனுக்குள் என்ன நடந்தது? உங்களுக்கு யார் பெண்களை சப்ளை செய்கிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியும். எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என உங்கள் குடும்பத்தின் மீது சத்தியமாக சொல்லுங்கள்? உங்களால் பாதிக்கப்பட்ட 3 பெண்களை எனக்குத் தெரியும். நான் நிஜத்திலும் கர்ஜிக்கும் சிங்கம், உங்களோடு என்னை ஒப்பிடாதீர்கள். வாழ்க்கையில் உண்மையாக இருங்கள்.
எனக்கு எங்காவது ஏதேனும் பிரச்னை ஏற்படுமாயின், அப்போது என்னுடைய காளி அவதாரத்தை நீங்கள் பார்க்க நேரிடும். என் கரியரை பாழாக்கினாலும், என்னைக் கொன்றாலும் சரி, அப்போதும் நீங்கள் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதைத் தான் சொல்வேன்.
செக்ஸுவல் கமிட்மெண்டில் ஈடுபடாமல் அவரால் ஒரு வேலையும் செய்ய முடியாது. அப்படி ஆசைக்கு இணங்குபவர்களுக்கு படங்களில் வாய்ப்பு கொடுப்பதுடன், மேடைக்கு மேடை புகழ்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்”
என பதிவிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி. எதற்காக அந்த நடிகரை டார்கெட் செய்து இத்தனை போஸ்ட் போட்டிருக்கிறார் என்பது தான் ரசிகர்களின் தற்போதைய குழப்பமும், கேள்வியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.