/indian-express-tamil/media/media_files/2025/05/24/s9K0NGqEgjYWKVA0b1Co.jpg)
மஷாபிள் இந்தியாவுடனான 'கேட் க்ராஷஸ்' (Gate Crashes) என்ற ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்கள் வீடுகளின் தனிப்பட்ட இடங்களையும், தங்கள் வாழ்க்கை முறையையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில், திரைப்பட நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது மும்பை இல்லத்தின் கதவுகளை ரசிகர்களுக்காகத் திறந்து வைத்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Step inside actor Malavika Mohanan’s ‘Kerala inspired Mumbai home’, with Athangudi tiles, dark wood interiors and artefacts from her life
தனது வீட்டை ஒரு "நினைவுகளின் பெட்டகம்" (Memory Box) போல மாற்றியிருப்பதாகக் கூறியுள்ள மாளவிகா, கேரளாவின் பாரம்பரிய அம்சங்களான தள ஓடுகள் (Traditional Tiles), மரச்சாமான்கள் (Furniture) மற்றும் ஏராளமான செடிகள் (Plants) மூலம் இல்லத்தை அலங்கரித்துள்ளார். தொடர்ந்து, வீட்டின் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய மாளவிகா, தனது இல்லத்தை "மும்பையின் நடுவே ஒரு கேரள சோலை" (Kerala Oasis in the midst of Mumbai) என்று குறிப்பிட்டார்.
தனது வேர்களிலிருந்து (Roots) உத்வேகம் பெற்ற ஒன்றை உருவாக்கவே தான் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளத அவர், 'நாலுகெட்டு' (Nalikettu) பாணியில் கட்டப்பட்ட வீடுகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அப்படி ஒரு வீடு தனக்கும் இருக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டதாகவும் அவர் கூறினார். "மணி ரத்னம் படங்களில் நிறைய நாலுகெட்டு வீடுகளைப் பார்த்திருக்கிறேன். அது கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இருந்த பழைய பாரம்பரிய வீடுகளின் ஒரு பகுதியாக இருந்தது, அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதை உருவாக்க முடியாது, இல்லையென்றால் நிச்சயமாக செய்திருப்பேன்," என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும், தனது அழகான வீட்டிற்கான பெருமையை மாளவிகா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட மாளவிகா, "இந்த இடத்தை என் அம்மா தான் முழுமையாக அலங்கரித்தார். அவருக்கு உட்புற வடிவமைப்பில் (Interiors) ஒரு சிறந்த கண் இருக்கிறது, அதை நீங்கள் பார்க்க முடியும்," என்றும் கூறிய அவர். பின்னர், தனது வீட்டின் "முக்கிய" (Hero) அம்சங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.
முதலில் அவர் குறிப்பிட்டது தரைத்தளம் (Floor). அது தமிழ்நாட்டின் அதே பெயரைக் கொண்ட ஒரு கிராமமான ஆத்தங்குடியின் (Athangudi) பாரம்பரிய தள ஓடுகளால் (டைல்ஸ்) ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஓடுகள் செட்டிநாடு மரச்சாமான்களுக்குப் (Chettinad Furniture) பெயர் பெற்றவை. இந்த ஓடுகள்தான் வீட்டின் "முக்கிய ஈர்ப்பு" (Statement Piece) என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது வீட்டின் கருமையான மரச்சாமான்கள் (Dark Wood Furniture), தென்னிந்திய கலைப்பொருட்கள் (Artefacts) மற்றும் ஓவியங்கள் (Paintings), குறிப்பாக ஒரு அழகான தஞ்சாவூர் ஓவியம் (Tanjore Painting) ஆகியவற்றைக் காட்டினார். பழங்கால தஞ்சாவூர் ஓவியங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவற்றை மதுரை போன்ற இடங்களில் குறைந்த விலையில் கூட பெற முடியும் என்றும் மாளவிகா விளக்கினார்.
தனது வீட்டில் இருந்த செடிகள் மற்றும் தென்னிந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறிய கோவிலையும் (Mandir) அவர் காட்டினார். "வீட்டில் முதலில் கட்டப்பட்டது இந்த கோவில்தான்; அதற்கென ஒரு மூலையை ஒதுக்கிவிட்டு, அதன் பின்னரே மற்ற வீட்டின் கட்டுமானப் பணிகள் நடந்தன," என்று அவர் கூறினார். அதன்பின்னர், மாளவிகா தனது ரசிகர்களுக்கு செடிகள் நிறைந்த தனது பால்கனியை (Balcony) காட்டி அது தனக்கு "நிம்மதியும் அமைதியும் தரும் இடமாக" (Place of solace and peace) இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், தனது தாயாருக்கு வழக்கத்திற்கு மாறான பொருட்களைச் சேகரிப்பதில் விருப்பம் உண்டு என்றும், அவர்கள் எங்கு சென்றாலும் ஏதாவது ஒன்றை வாங்கி வருவதாகவும், விலங்கு உருவங்கள் மீதான அவர்களின் பொதுவான விருப்பம் தங்கள் வீட்டை ஒரு சிறிய "காடு" (Jungle) போல மாற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். தனது குடும்பம் முழுவதும் "பாரம்பரிய விஷயங்களை விரும்புபவர்கள்" (Sucker for traditional things) என்று மாளவிகா ஒப்புக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.