Advertisment

’நேர் கொண்ட பார்வை’யில் இயக்குநர் சிவாவும் உள்ளாரா?

அப்போது இந்த டைட்டிலை அவர் சொல்லியிருக்கிறார். 

author-image
WebDesk
Jun 14, 2019 10:48 IST
Ner Konda Paarvai

நடிகர் அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போது, ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தாராகள் குழுவினர்கள்.

தமிழ் கவிஞர் பாரதியாரின் கவிதையில் இன்ஸ்பையராகி இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரதா ஸ்ரீநாத், “இப்போது தான் நேர் கொண்ட பார்வை பாரதியாரின் கவிதை என்பதை நண்பர் மூலம் அறிந்துக் கொண்டேன். புதுமை பெண் / மார்டன் பெண் என பொருள் தரும் இதை விட சிறப்பான டைட்டில் இந்தப் படத்திற்கு பொருந்தாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலை வைத்தது யார் தெரியுமா? வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகியப் படங்களின் இயக்குநர் சிவா தான் அஜித்துக்கு இந்த ‘நேர் கொண்ட பார்வை’யை டிக் செய்துள்ளார்.

இதைப் பற்றி வினோத், “விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பிங்க் ரீமேக்கைப் பற்றி சிவாவிடம் கூறியிருக்கிறார் அஜித். அப்போது இந்த டைட்டிலை அவர் சொல்லியிருக்கிறார்.

இந்த விஷயத்தைப் பற்றி அஜித் என்னிடம் கூறினார். பிறகு இயக்குநர் சிவாவின் ஒப்புதலோடு, ‘நேர் கொண்ட பார்வை’ டைட்டிலை இதற்கு வைத்தோம்” என்கிறார்.

#Ajith #Vidya Balan #H Vinoth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment