/tamil-ie/media/media_files/uploads/2020/11/Simbu-Eeswaran-movie-controversy.jpg)
சிம்பு
நடிகர் சிம்புவின் படங்கள் இடைவெளி விட்டு வெளியானாலும், அவரது ரசிகர்கள் கூட்டத்திற்கு குறைவேயில்லை. தற்போது ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, 22 நாட்களில் சிம்பு நடித்து முடித்திருக்கிறார்.
வேல் யாத்திரையை தடை செய்யக்கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை
அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு தன் தோளில் பாம்புடன் போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது சிம்பு இரண்டு பேர் உதவியுடன் மரத்தில் இருந்த பாம்பை பிடித்து சாக்குப் பையில் போடும் வீடியோ வெளியாகி வைரலானது.
பெரிய தலைவலி போயே போச்சு: வாட்ஸ்அப் ஸ்டோரேஜ் புது அப்டேட்
அந்த வீடியோவைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அதோடு சமூக வலைதளங்களில் பெருமளவும் ஷேர் செய்தனர். இந்நிலையில் அந்த வீடியோவால் புதிய சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. சிம்பு பாம்பை துன்புறுத்தியதாக வனத்துறையினரிடம் வன விலங்கு நல ஆர்வலர் புகார் அளித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், வன விலங்கு நல ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், சிம்பு பாம்பை துன்புறுத்தியதாகவும்,நடிகர் சிம்பு மற்றும் படத்தின் இயக்குனர் சுசீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்து உள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.