ரூ.200 எங்க அப்பா தரல, கொடுத்திருந்தா என்‌ ரேன்ஞ் வேற... மனைவியிடம் புலம்பிய மணிரத்னம்: அப்போ அவர் ஆசை சினிமா இல்லையா?

டென்னிஸ் பயிற்சிக்காக தனது தந்தை மாதம் ரூ. 200 கொடுக்கவில்லை எனவும், அவ்வாறு கொடுத்திருந்தால் இந்நேரம் விம்பிள்டன் சாம்பியன் ஆகி இருப்பேன் என்றும் மணிரத்னம் கூறுவார் என அவரது மனைவி சுஹாசினி தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் பயிற்சிக்காக தனது தந்தை மாதம் ரூ. 200 கொடுக்கவில்லை எனவும், அவ்வாறு கொடுத்திருந்தால் இந்நேரம் விம்பிள்டன் சாம்பியன் ஆகி இருப்பேன் என்றும் மணிரத்னம் கூறுவார் என அவரது மனைவி சுஹாசினி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Suhasini Maniratnam

இயக்குநர் மணிரத்னம், தனது வாழ்க்கையில் ஒரு குறை இருப்பதாக அடிக்கடி கூறுவார் என்று அவருடைய மனைவியும், நடிகையுமான சுஹாசினி குறிப்பிட்டுள்ளார். சினி உலகம் யூடியூப் சேனல் உடனான நேர்காணலின் போது இந்த தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் மற்றும் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் மணிரத்னம். நடிகர்களை கடந்து இயக்குநர்களுக்கு என தனி ரசிகர் வட்டம் இருக்கும். அப்படி பார்த்தால், மணிரத்னத்திற்கு சற்று அதிகமான அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம். குறிப்பாக, சம கால இயக்குநர்கள் பலரும் மணிரத்னத்திற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

ஒரு காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவை பார்த்து சினிமா மீது ஆர்வம் கொண்டு இயக்குநர் கனவுடன் சென்னைக்கு புறப்பட்டதாக கூறுவார்கள். அதற்கு அடுத்தபடியாக, மணிரத்னத்தின் திரைப்படங்களை பார்த்து, அவை ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்ததாக பலர் கூறி இருக்கின்றனர். அந்த அளவிற்கு மணிரத்னத்தின் நாயகன் திரைப்படம் தங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ் போன்றோர் கூறி இருக்கின்றனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான் போன்ற உச்ச நட்சத்திரங்களை கொண்டு மட்டுமே வெற்றிப் படம் கொடுக்க முடியும் என்று இல்லாமல், குழந்தைகளை மையமாக வைத்தும் கூட ஒரு படத்தை வெற்றியடைய வைக்க முடியும் என்று எடுத்துக்காட்டாக அஞ்சலி திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார்.

Advertisment
Advertisements

 

 

இப்படி திரைத்துறையில் ஜாம்பவானாக இருக்கும் மணிரத்னத்திற்கு மனதில் ஒரு குறை இருப்பதாக அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசினி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, "மணிரத்னத்தின் அப்பா அவருக்கு டென்னிஸ் பயிற்சிக்காக மாதம் ரூ. 200 கொடுக்கவில்லை. ஆனால், டென்னிஸ் பயிற்சிக்காக தனது தந்தை ரூ. 200 கொடுத்திருந்தால், இந்நேரம் விம்பிள்டன் போட்டியில் விளையாடி இருப்பேன் என்று மணிரத்னம் கூறுவார். இது தான் தன்னுடைய வாழ்க்கையில் பெரிய குறை என்று மணிரத்னம் கூறுவார். ஒவ்வொரு முறை டென்னிஸ் பார்க்கும் போதும், இவ்வாறு மணிரத்னம் கூறிவிடுவார்" என சுஹாசினி தெரிவித்துள்ளார். 

Maniratnam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: