/indian-express-tamil/media/media_files/2025/09/13/suki-sivam-2025-09-13-17-30-13.jpg)
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகையும், பாடகியுமான கே.பி. சுந்தராம்பாள், குடும்பம் ஒரு கட்டத்தில் வறுமையில் வாடிய நிலையில் அவரது தாயார் மகள்களுடன் தற்கொலை செய்ய முடிவெடுக்கும் அளவுக்குச் சென்றுள்ளார் என்று சுகிசிவம் மேடை ஒன்றில் கூறியிருப்பது தமிழ் சந்திப்பு யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் சுகிசிவம் பல சுவாரசியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
நாடக உலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த கே.பி.சுந்தராம்பாள் நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தபிறகு, 1935-ஆம் ஆண்டு வெளியான 'பக்த நந்தனார்' திரைப்படத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றார். அன்றைய காலகட்டத்தில் இந்திய நடிகைகளில் இவ்வளவு பெரிய தொகையை வாங்கிய முதல் நபர் இவரே. இது இன்றைய மதிப்பில் பல கோடிகளுக்குச் சமம். தொடர்ந்து, 'ஔவையார்', 'திருவிளையாடல்', 'கந்தன் கருணை', 'பூம்புகார்', 'காரைக்கால் அம்மையார்' போன்ற பல படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். குறிப்பாக, 'ஔவையார்' படத்தில், தனது குரலால் பாடி, நடித்து ஒட்டுமொத்த மக்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் அவரின் சிறுவயது வறுமை முதல் அவர் இவ்வளவுதூரம் வளர்ந்தது குறித்து சுகிசிவம் கூறியுள்ளார். கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள், அன்றைய காலகட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரே நடிகை. இது இன்றைய மதிப்பில் 100 கோடி ரூபாய்க்கு சமம். ஆனால், அவரது வாழ்க்கையின் ஆரம்பம் அவ்வளவு எளிதாக இல்லை.
ஒரு சமயம், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அவரது தாய், தனது இரண்டு மகள்களுடன் காவேரி ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அந்த நேரத்தில், சுந்தராம்பாள் தனது தாயின் கைகளைப் பிடித்து, "அம்மா, என்னைக் கொல்ல வேண்டாம். நான் வாழ வேண்டும்,நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன்," என்று உருக்கத்துடன் கேட்கவே அவரது தாயாரும் ஒப்புக்கொண்டு தற்கொலை முடிவை கைவிட்டுள்ளார். .
மகளின் இந்த வார்த்தைகளால் மனம் மாறிய தாய், தற்கொலை முடிவை கைவிட்டு, ரயில் நிலையம் ஒன்றில் ஒரு பயணிகள் ரயிலில் ஏறினர். அந்த ரயிலில் அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒரு நபர், அவர்களின் களைத்துப் போன முகத்தைப் பார்த்து, "கடைசியாக எப்போது சாப்பிட்டீர்கள்?" என்று கேட்டார். அவரது தாயார் நடந்ததை விளக்கினார். அப்போது அந்த நபர், தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், பிள்ளைகளைதான் வளர்ப்பதாகவும் கூறினார். மேலும் கே.பி. சுந்தரம்மாளின் தாயிடம் உங்களுக்கு அண்ணன் இல்லையா என்னை நம்புங்கள் நான் உங்களுக்கு அண்ணனாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் அவர்களை அவர் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர் சுந்தராம்பாளின் திறமையைக் கண்டறிந்து, அவரது பாடும் திறனை வளர்த்தார். இதன் மூலம் சுந்தராம்பாள், புகழ் பெற்ற கொடுமுடி கோகிலம் ஆக மாறினார். அவரது புகழ் எந்த அளவுக்கு உயர்ந்தது என்றால், மகாத்மா காந்தி அவரது வீட்டில் விருந்து உண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.