Tamil Serial News: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் பொன்வண்ணன் உள்ளிட்ட 4 முக்கியக் கதாபாத்திரங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன.
ரஜினி பாடலை மாஸாக வாசித்த மாற்றுத்திறனாளி இளைஞர்!
கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதமே நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம், தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், சீரியல் படபிடிப்பை சரிவர நடத்த முடியவில்லை.
இதனால் பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் தொடர்களில் இருந்து விலகினர். இந்நிலையில் சித்தி 2 சீரியல் நடிகர்களிலும் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவரும், தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
“சித்தி 2 தொடர்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பே முக்கியம். விரைவில் சித்தி 2 சன் டிவியில் ஒளிபரப்பாகும்” என இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ராதிகா.
சென்னையில் ஜூலை 18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக பொன்வண்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். ஷில்பா நடித்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமியும், ராதிகாவின் மருமகளாக நடித்த நிகிலாவுக்குப் பதில் இனி காயத்ரியும் நடிக்கிறார்கள். அதோடு ஸ்ரீஷா உள்ளிட்ட இன்னும் சில கதாபாத்திரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”