Advertisment

எதிர்நீச்சல் இயக்குனர் வீட்டில் சுப நிகழ்ச்சி : சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்து : என்ன விஷேஷம் தெரியுமா?

ஒரு சில படங்களில் சவுண்ட் என்ஜினியராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ethirn
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் நடந்த விசேஷம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில்தான் படிக்கவில்லை என்றாலும்படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.

இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. கோலங்கள் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட இயக்குனர் திருச்செல்வம், ஒரு நடிகராகவும் கோலங்கள் சீரியலில் தன்னை நிரூபித்திருப்பார். தேவயானி நாயகியாக நடித்த இந்த சீரியல் இன்றுவரை பேசப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது.

எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தஞ்சையில் இருந்து சென்னை வந்த திருச்செல்வம், தனது கடினமான முயற்சியின் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்று ஒரு சில படங்களில் சவுண்ட் என்ஜினியராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு கோலங்கள் என்ற சீரியலை இயக்கியுள்ளார். தேவயானியின் சின்னத்திரை என்ட்ரியான இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

அதன்பிறகு ஒரு சில சீரியல்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற திருச்செல்வம், கடந்த 2022-ம் ஆண்டு முதல் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சீரியல் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில், ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செல்வத்தின் மகள் பிரியதர்ஷினியின் மகள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. தற்போது மகளின் திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைக்கும் பணியில் திருச்செல்வம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சின்னத்திரை ரசிகர்கள் பலரும் அவரது மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment