/tamil-ie/media/media_files/uploads/2021/09/sundari-promo.jpg)
சுந்திரி சீரியலில் மொத்த குடும்பமும் ஒன்று கூடவுள்ள நிலையில் கார்த்திக் மாட்டுவாரா அல்லது தப்பித்து விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சன் டிவியில் ஒளிப்பராகி வரும் சீரியல் சுந்தரி. இதில் கேப்ரியல்லா, ஜிஸ்னு மேனன், ஸ்ரீகோபிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது சன் டிவி சுந்தரி சீரியலில் ஒரு ஸ்பெசல் எபிஷோடை ஒளிப்பரப்ப உள்ளது. அதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
சன் டிவி வெளியிட்டுள்ள சுந்தரி சீரியலின் புதிய ப்ரோமோவில் அனு, நம்ம எல்லாருக்கும், இனிமே நடக்குறது எல்லாம் நல்லபடியா நடக்க, எங்க வீட்டில் பூஜை நடத்தப் போறோம், அதுக்கு சுந்தரி, கார்த்திக், கிருஷ்ணா, முருகன் குடும்பம் என எல்லாரும் கலந்துக்க போறாங்க என சுவாரஸ்யமான தகவலைச் சொல்கிறார்.
இதைக்கேட்டு நாங்க எல்லாருமா? அதுவும் ஒரே நேரத்துல, ஒரே வீட்டுலயா என பதறுகிறார் கிருஷ்ணா. அப்ப கண்டிப்பா கலாட்டா உண்டு என ஜாலியாகிறார் சுந்தரி. ஆனால் இதிலிருந்து தப்பிக்க வழி இல்லயா என கார்த்திக் பதற, அதுக்கு ஒரே வழிதான் கண்ணாமூச்சி ஆட்டம்தான் என கண்ணடிக்கிறார் சுந்தரி.
இவ்வாறு சுந்தரி சீரியலின் கண்ணாமூச்சி ஆட்டம் என்ற ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிஷோடுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ள இந்த எபிஷோடை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.