/indian-express-tamil/media/media_files/Aktn5CWYquOGVWZsoIYH.jpg)
காதலியை கரம் பிடித்த வானத்தைப் போல சீரியல் நடிகர்; இருவர் ஒன்றான தருணம் என இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சிப் பதிவு
வானத்தைப் போல சீரியல் நடிகர் கார்த்தி தனது காதலி காயத்ரியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’வானத்தைப் போல’ தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் அஷ்வின் கார்த்தி. சீரியலில் துளசியின் கணவர் ராஜபாண்டி ரோலில் அஸ்வின் கார்த்தி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். பின்பு ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்தார்.அஸ்வின் கார்த்தி, ராஜ் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.
இந்தநிலையில், அஸ்வின் கார்த்திக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. காயத்ரி குணசேகரன் செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட். காயத்ரியும் கார்த்தியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நேற்று இரு வீட்டார் முன்னிலையில் அவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது.
கார்த்தியும், காயத்ரியும் சமூகவலைத்தள பக்கங்களில் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். இருவரும் சேர்ந்து ரீல்ஸ்கள் பல பதிவிட்டு வந்தனர்.
இவர்களுடைய திருமணத்திற்கு ’வானத்தைப் போல’ தொடர் நடிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் குறித்து கார்த்தி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’இருவர் ஒன்றான தருணம்!’ எனப் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.