/indian-express-tamil/media/media_files/kaNmmtLrnzBxpxMWErUr.jpg)
சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் நடிகை, மிஸ்டர் மனைவி சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளார்.
சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து நடிகை ஷபானா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் நடிகை, மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்க உள்ளார்.
சன் டிவியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு மிஸ்டர் மனைவி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை ஷபானா நடித்து வந்தார். அண்மையில், அவர் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால், ஷபானாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷபான சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் குறித்து சமுகவலைதளங்களில் பல உலா வந்தன. இதற்கு அதற்கு நடிகை ஷபானா மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகி அஞ்சலி கதாபாத்திரத்தில் ஷபானாவுக்கு பதிலாக, வானத்தைப் போல சீரியல் நடிகை தேப்ஜானி நடிக்கவுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் இருந்து நடிகை தேப்ஜானி விலகுவதாக அறிவித்திருந்தார். தற்போது, மிஸ்டர் மனைவி தொடரில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதன் மூலம், அவர் மிஸ்டர் மனைவி சீரியலில் நடிப்பதற்காக வானத்தைப்போல தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது தெளிவாகிறது.
இயக்குனர் ராஜீப் சட்டர்ஜி இயக்கி 2013-ல் வெளியான நாக் அவுட் என்ற தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக தேப்ஜானி அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வங்கமொழி சீரியலான அபோன்ஜோன் மூலம் டிவியில் அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் ‘ராசாத்தி’ என்ற சீரியலில் அறிமுகமானார். இதையடுத்து, சன் டிவியீல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தை போல’ சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வானத்தைப் போல, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிரபலமாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.