நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து, சன்னி லியோன் தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டானியல் ஆகியோர், கடந்த 2017ம் ஆண்டு பெண் குழந்தையொன்றை தத்தெடுத்தனர். இந்நிலையில், தங்களுக்கு வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சன்னி லியோன், அக்குழந்தைகளுடன் தன் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அக்குழந்தைகளுக்கு ஆஷர் சிங், நோவா சிங் என பெயரிட்டுள்ளனர்.
அப்பதிவில், “இது கடவுளின் திட்டம்!! 3 குழந்தைகளுடன் குறுகிய காலத்திலேயே குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். பல ஆண்டுகள் கழித்து ஆஷர் சிங், கோவா சிங், நிஷா கவுருடன் எங்கள் குடும்பம் முழுமை அடைந்திருக்கிறது. எங்கள் இரட்டைக் குழந்தைகள் சில வாரங்களுக்கு முன்புதான் பிறந்தனர். ஆனால், பல ஆண்டுகளாகவே எங்கள் இதயங்களிலும், கண்களிலும் வாழ்ந்து வந்தனர். எங்களுக்கு சிறப்பானதை அளிக்கவே கடவுள் திட்டமிட்டிருக்கிறார். எங்களுக்கு பெரிய குடும்பத்தை தந்திருக்கிறார். மூன்று குழந்தைகளின் பெருமையான பெற்றோர்கள் நாங்கள். உங்கள் எல்லோருக்கும் இது அதிர்ச்சி!” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், “இந்த இரட்டைக் குழந்தைகள் எங்களுடைய குழந்தைகள் தான். வாடகைத் தாய் மூலம் இந்த குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நாங்கள் குடும்பமாக முழுமையடைந்திருக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறது!”, என பதிவிட்டார்.