கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் பிரீத்திக்கு ஃபேன்ஸ் அதிகம். இவரது நிஜப் பெயர் அக்ஷிதா போபையா. கர்நாடகாவை சேர்ந்தவர். மைசூரில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார் . முதன் முதலில் 2017 ல் ‘ரியல் போலீஸ்’ என்கிற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னடத்தில் ‘அம்பி நிங் வயசைதோ’ , பி5, ஷிவார்ஜூனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சின்னத்திரையில் முதல் அறிமுகம் சன்டிவியின் அழகு சீரியல். நிவி என்கிற கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். ஜீ தமிழின் ரெக்க கட்டி பறக்குது மனசு, விஜய்டிவியின் தாழம்பூ, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பாப்புலரானார். கலர்ஸ் சூப்பரில் ஒளிபரப்பான ஷாந்தம் பாப்பம் தொடரிலும் நடித்தார். தற்போது கண்ணான கண்ணே சீரியலில் பிரீத்தி கேரக்டரில் அப்பாவின் செல்ல மகளாக நடித்து வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil