Super Star Rajinikanth: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் மற்ற நடிகர்களின் திரைப்படங்களைப் பார்ப்பதோடு, தான் ரசித்தப் படங்களின் இயக்குநர்களையும், அதில் நடித்திருக்கும் நடிகர்களையும் நேரில் அழைத்துப் பாராட்டக் கூடியவர். தற்போது சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட இயக்குனர்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
Advertisment
“Brilliant work kanna. Semaya irukku. Loved it” These were Rajini sir’s words after watching the teaser of Mafia. Thank god I did not faint. Blown away by his humility. Thalaivar for a reason ???????? pic.twitter.com/e6pdZtOjbI
’துருவங்கள் 16’ என்ற த்ரில்லர் படத்தில் அறிமுகமான கார்த்திக், அதில் பெரும் வெற்றியையும் பெற்றார். நடிகர் ரஹ்மான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அரவிந்த் சாமி, ஷ்ரேயா நடிப்பில் தனது இரண்டாவது திரைப்படமாக ’நரகசூரனை’யும் முன்பே இயக்கி முடித்துவிட்டார். இருப்பினும் சில ஃபைனான்ஸியல் பிரச்னைகளால் அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இப்போது தனது மூன்றாவது திரைப்படமான ’மாஃபியா’வையும் முடித்து விட்டார். இந்தப் படத்தில் அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், ”மாஃபியா”வின் டீஸரைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் நரேனை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். அந்த சந்திப்பு குறித்து,"பிரிலியண்ட் ஒர்க் கண்ணா. செமயா இருக்கு. ஐ லவ்ட் இட்" என மாஃபியாவின் டீஸரைப் பார்த்த ரஜினி கூறியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள கார்த்திக், ”மயங்கி விழாமல் பார்த்துக் கொண்ட கடவுளுக்கு நன்றி, தலைவர் ஃபார் ஏ ரீசன்” எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news