New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Rajinikanth.jpg)
Rajinikanth
சென்னை திரும்பும் ரஜினி, தர்பார் டப்பிங்கை முடித்து விட்டு, தனது 168-வது படத்துக்கான வேலையைத் தொடங்குவார்.
Rajinikanth
Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ’பேட்ட’ திரைப்படத்தோடு இந்தாண்டை தொடங்கினார். சிம்ரன், த்ரிஷா, சசிக்குமார், விஜய்சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்த அப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ஒப்பந்தமானார் ரஜினி. அவரின் 167-வது படமான இதனை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் இதன் படபிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. தர்பார் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து, தற்போது இமயமலைக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களுக்கும் அவர் சென்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, தர்பார் டப்பிங்கை முடித்து விட்டு, தனது 168-வது படத்துக்கான வேலையைத் தொடங்குவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி ஆசிரமத்திற்கு ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அங்கு ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். சிவா இயக்கும் ரஜினியின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. “எந்திரன், பேட்ட” ஆகியப் படங்களுக்குப் பிறகு ரஜினியும் - சன் பிக்சர்ஸும் இணைந்துள்ள 3-வது படம் இது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.