நான் ஒரு சிறந்த நடிகன் இல்லை; கார்த்தியை போல் என்னால் நடிக்க முடியாது: சூர்யா ஓபன் டாக்

நான் ஒரு சிறந்த நடிகன் இல்லை. நான் அதிகப்படியாக நடிக்கிறேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு அந்த கருத்து இருக்கும் என்று சூர்யா கூறியுள்ளார்.

நான் ஒரு சிறந்த நடிகன் இல்லை. நான் அதிகப்படியாக நடிக்கிறேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு அந்த கருத்து இருக்கும் என்று சூர்யா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Surya Karthik

சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அதில் அவரது நடிப்புக்கு பலரின் பாராட்டுக்களை குவிந்து வருகின்றன. குறிப்பாக, அவரது முந்தைய படமான 'காங்குவா' (2024) படுதோல்வியடைந்த நிலையில், 'ரெட்ரோ' மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் சூர்யா முதன்முறையாக இணைந்த படம் என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Suriya admits he’s not a ‘great actor’, acknowledges overacting criticism: ‘I can’t be Karthi… I can’t be Meiyazhagan’

திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும், சூர்யாவின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஏனெனில், படத்தின் பின்னடைவுக்கு அவரது நடிப்பு எந்த வகையிலும் காரணமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சூர்யா, இதற்கு முன்பு பல தோல்விப் படங்களில் கூட தனது வலுவான நடிப்பால் தனித்துத் தெரிந்தார். அப்படிப்பட்ட நடிகர், சமீபத்தில் தான் ஒரு சிறந்த நடிகன் என்று நினைக்கவில்லை என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

'ரெட்ரோ' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் உரையாடியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். படத்தின் உருவாக்கத்தைப் பற்றி பேசிய கார்த்திக் சுப்பராஜ், 'ரெட்ரோ'வின் கதையோட்டத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லாத சிறிய காட்சிகளில் கூட சூர்யா மிகுந்த கவனம் செலுத்தியதாகக் கூறினார். "அவர் எந்த காட்சியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நான் கவனித்தேன்," என்று அவர் பாராட்டினார்.

Advertisment
Advertisements

இதற்கு பதிலளித்த சூர்யா, "நான் ஒரு சிறந்த நடிகன் இல்லை. நான் அதிகப்படியாக நடிக்கிறேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு அந்த கருத்து இருக்கும். பாலா சார் ஒருமுறை எனக்கு சொன்னதைத்தான் நான் பின்பற்றுகிறேன்: 'கேமரா முன்னாடி உண்மையா இரு; நீ என்ன உணர்கிறாயோ அதை அப்படியே காட்டு. அந்த கதாபாத்திரத்தோட உணர்வுல இருந்து நீ விலகிப் போறது எனக்கு தெரியாம போனா, தயவு செஞ்சு என்கிட்ட சொல்லு. நீ சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.' நான் அந்த பல்கலைக்கழகத்தில் (பாலாவிடம்) படிச்சதுனால... என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன். எல்லா தடவையும் அது சரியா வர்றதில்ல, ஆனா என்னோட உண்மையான முயற்சியை போடுறேன்," என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

மேலும், தனது சகோதரர் கார்த்தியைப் போல் தன்னால் நடிக்க முடியாது என்றும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். "'மெய்யழகன்' மாதிரி ஒரு படம் எடுத்துக்கோங்க. என்னால கார்த்தியைப் போல... என்னால் மெய்யழகனைப் போல நடிக்க முடியாது. சில விஷயங்களை என்னால செய்ய முடியாதுன்னு சொல்றதுல எனக்கு எந்த வெட்கமும் இல்ல," என்று அவர் மேலும் தெரிவித்தார். 'காங்குவா'வின் தோல்விக்குப் பிறகு 'ரெட்ரோ'வில் சூர்யாவின் நடிப்புக்குக் கிடைத்துள்ள பாராட்டுக்கள் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

actor surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: