செயின் ஜெயபால் ரீ-என்ட்ரி; 42 ஆண்டுகளுக்கு பின் டி.ஆர் படம் ரீ-ரிலீஸ்: அடுக்கு மொழி வசனத்தை கொண்டாட தயாரா?

‘உயிருள்ள வரை உஷா’ படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தை 4-கே தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக டி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

‘உயிருள்ள வரை உஷா’ படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தை 4-கே தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக டி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
T Rajendar on Uyirullavarai Usha 1983 film to rerelease Tamil News

1983-ம் ஆண்டு வெளியான உயிருள்ளவரை உஷா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை நளினி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் டி. ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.

Advertisment

இந்த படத்தை இயக்கியது இவர் தான் என்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இயக்குனர் பெயர் மாற்றப்பட்டது என்றும் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்தார் டி.ராஜேந்தர். அதன்பிறகு, 1983-ம் ஆண்டு அவரே தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.

இந்த படத்தில் அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.

1983-ம் ஆண்டு வெளியான உயிருள்ளவரை உஷா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை நளினி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். சரிதா, கங்கா, ராதா ரவி, வெந்நிறஆடை மூர்த்தி, கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, டி.ராஜேந்தரே இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ‘இதயமதை கோவில் என்றேன்’ என்ற பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.

Advertisment
Advertisements

கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ‘உயிருள்ள வரை உஷா’ படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தை 4-கே தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக டி.ராஜேந்திரன் கூறியுள்ளார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tamil Cinema Entertainment News Tamil T Rajendar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: