Advertisment

தூத்துக்குடியில் திடீரென மயங்கிய டி.ராஜேந்தர்; நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு

திடீரென மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்; தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு

author-image
WebDesk
New Update
T Rajendar

திடீரென மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்; தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன.

இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, உதவிகளை வழங்கினார்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சி புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் கூட்ட நெரிசலில் சிக்கினார். இதனால் அவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளித்து, காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

T Rajendar Thoothukudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment