/indian-express-tamil/media/media_files/4TruYCUDXw6zsHgnsyvx.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு மாதத்திற்குள் நிறுத்தாவிட்டால், பிக்பாஸ் வீடே இருக்காது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இதில் தற்போது விசித்ரா, கானா பாலா, சின்னத்திரை நடிகரக்ள் விஷ்ணு, விக்ரம், மாயா, பூர்ணிமா, ஜோவிகா என்று பல போட்டியாளர்கள் உள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பாக போட்டியாளர் பிரதீப்பை வெளியே அனுமதியது பெரும் சர்ச்சையானது. இதனால் பலரும் நெறியாளர் கமலை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சீசனில் அதிகமான காதல் இருப்பதுபோல பாகங்கள் இடம் பெற்றுள்ளது. நிக்சன் ஐஷீவிடம் நடந்து கொள்வதும் பலரால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஷூ வெளியேற்றப்பட்டதும், பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் பிக்பாஸில் நடைபெறும் சில சம்பவங்கள், பார்ப்பதற்கு ஏற்புடையதாக இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ” பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூகத்தில் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. இதே நிலை நீடிக்குமேயானால் பிக்பாஸ் வீடே இருக்காது. ஒரு மாத காலத்திற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும். இது விஜய் டிவிக்கு எச்சரிக்கை” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.