எம்.எஸ்.வி-ஐ வற்புறுத்தி பாடகராக மாற்றிய ஏ.ஆர் ரகுமான்: பாட்டு இவ்ளோ ஹிட் ஆகும்னு எதிர்பார்க்கவே இல்லை!

பாடல் பாட ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த வாய்ப்பை மறுத்த எம்.எஸ்.வி பிறகு அற்புதமாக பாடி அந்த பாடலை ஹிட் செய்துள்ளார்.

பாடல் பாட ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த வாய்ப்பை மறுத்த எம்.எஸ்.வி பிறகு அற்புதமாக பாடி அந்த பாடலை ஹிட் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது இசையால் பெரிய வெற்றியை கொடுத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஒரு சில பாடல்களை மட்டும் பாடியுள்ளார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாட வந்த வாய்ப்பை மறுத்தாலும், இறுதியில் அந்த பாடலை தனது ஸ்டைலில் பாடி அசத்தியுள்ளார். இந்த பாடலை கேட்ட வைரமுத்து உள்ளம் நெகிழ்ந்து போயுள்ளார்.

Advertisment

கடந்த 1999-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் சங்கமம். ரஹ்மான், விந்தியா, மணிவண்ணன், விஜயகுமார், ராதாரவி, வடிவேலு, சார்லி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடிய ‘’ஆளால கண்டா’’ என்ற பாடல் இன்றுவரை பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் ஒரு பாடலாக காலம் கடந்து நிலைத்திருக்கிறது. இந்த பாடல் கம்போசிங்கின்போது, எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இந்த பாடலை பாட வேண்டும் என்று நினைத்த ஏ.ஆர்.ரஹ்மான், இதற்காக அவரை தொடர்புகொண்டபோது, டியூனையும் பாடலையும் அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்ற கூறியுள்ளார்.

அதன்படி ஏ.ஆர்.ரஹ்மான் டியூன் மற்றும் பாடலை அனுப்ப, முதலில் வரும் ஹம்மிங்கை பார்த்த எம்.எஸ்.வி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று சொல்ல, அவரது மனைவி, நீங்கள் போய் பாடிவிட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு தெரியாது. அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டு, பாட முடியாது என்று வீட்டில் நேரடியாக போய் சொல்லிவிட்டு வந்துவிடலாம் என்று கிளம்பியுள்ளார்.

Advertisment
Advertisements

எம்.எஸ்.வி.ரஹ்மான் வீட்டுக்கு செல்லும்போது, அவரது வீட்டில் அலங்காரங்கள் அதிகமாக இருந்துள்ளது. என்ன என்று கேட்டபோது, எனது பிறந்த நாள். இந்த நாளில் நீங்கள் வந்து ஒரு பாடல் பாடினால் என்னை வாழ்த்தியது போல் இருக்கு என்று சொல்ல, என்ன சொல்வது என்ற தெரியாத எம்.எஸ்.வி பாடலை பாட முடிவெடுத்துள்ளார். டியூனை கேட்ட எம்.எஸ்.வி, பாட்டு சொல்லிக்கொடுங்க என்று சொல்ல, உங்களுக்கு நான் எப்படி சொல்லிக்கொடுக்க முடியும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு பாடுங்கள் இதுதான் டியூன். இப்படியே நீங்கள் பாட வேண்டம் என்று அவசியம் இல்லை என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

அதன்பிறகு எம்.எஸ்.வி அதில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து தனது ஸ்டைலில் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு டியூன் போட்டவர் ஏ,ஆர்.ரஹ்மான் தான் என்றாலும் அதை மாற்றி தனது ஸ்டைலில் பாடலை பாடி அசத்திய எம்.எஸ்.வி, தனது பரம ரசிகராக இருந்த வைரமுத்துவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். எம்.எஸ்.வி இசையில் பாடல் எழுதிய வைரமுத்து, அவர் தனது பாடலை பாடுவாரா என்று ஏங்கியபோது, இந்த பாடலை எம்.எஸ்.வி பாடி அசத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Kavignar Vairamuthu M S Viswanathan Ar Rahman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: