/indian-express-tamil/media/media_files/2025/01/24/Wf2x30A88hog0xQYPRDn.jpg)
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள நடிக அஜித், விபத்துக்குப் பிறகு முறையற்ற கையாளுதல் காரணமாக சக்கர நாற்காலியில் அடைக்கப்பட்ட தனது நண்பரின் அனுபவத்தைப் பற்றி கூறி, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது ஏன் அவசியம் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
Read In English: Tamil actor Ajith Kumar advises people to ‘not shove accident victims into auto or cab like ragdoll’: ‘Many things you need to be aware of’
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது தற்காலிகமாக நடிப்பில் இருந்து விலகி, துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தையத்தில் பங்கேற்று விளையாடி வருகிறார். சமீபகாலமாக அவ்வப்போது டிவி மற்றும் பத்திரிக்கைளுக்கு பேட்டி அளித்து வரும் அஜித், சமீபத்தில், கல்ஃப் நியூஸுக்கு அளித்த பேட்டியில் ஒருவர் விபத்தில் சிக்கினால் அவரை எப்படி கையாள வேண்டும், அவருக்கு முதல் சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்பது குறித்து, விளக்கமாக கூறியுள்ளார்.
ஒரு சாலை விபத்தில், நல்ல சமாரியர்களாக இருக்க முயற்சிக்கும் போது, மக்கள் வந்து உங்களை அழைத்துச் செல்கிறார்கள், அதுதான் முழுப் பிரச்சினையும். இந்தியாவிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளிலும், மக்கள் தங்களை நல்ல சமாரியர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவரைப் பார்த்துவிட்டு, அவர்களை அழைத்துச் சென்று, ஒரு ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, விபத்தில் சிக்கிய அந்த நபருக்கு முதுகெலும்பு காயம் ஏற்பட்டால், நீங்கள் அவரை ஆட்டோவில் அழைத்து செய்வதன் மூலம், நீங்கள் அவர்களை வாழ்நாள் முழுவதும் ஊனமாக்குகிறீர்கள்.
எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவருக்கு இது நடந்தது, அவர் புனேவில் ஒரு கார் விபத்தை சந்தித்தார், அப்போது அவரைச் சுற்றியுள்ள உள்ளூர்வாசிகள் அவரைத் தூக்கிச் சென்றார்கள், ஆனால் இந்த விபத்தில் அவரது முதுகெலும்பை உடைந்ததால், இப்போது அவர், சக்கர நாற்காலியில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே இதுபோன்ற விஷயங்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நான் சொல்ல முயற்சிக்கவில்லை, ஆனால் 'சாலையில் விபத்தில் சிக்கியவரை நோக்கி ஓடிச் சென்று ஒரு கந்தல் பொம்மையைப் போல தூக்கி ஆட்டோ அல்லது டாக்ஸியில் தள்ள வேண்டாம்' துணை மருத்துவர்கள் வரும் வரை காத்திருங்கள் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும்.
சிலர் சாலை விபத்துக்குள்ளானவர்கள் எப்படி தண்ணீர் கொடுக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட அஜித், விபத்தில் சிக்கிய அந்த நபர் உடனடியாக தண்ணீர் குடித்தால், விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும்போது அவருக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இதனால் அவர்களின் உயிரை இழக்க நேரிடும். எனவே நீங்கள் இது பற்றி அறிந்திருக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.
இது குறித்து, வோக்ஹார்ட் மருத்துவமனையின் மீரா சாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை ஆலோசகர் டாக்டர் அக்லேஷ் தண்டேகர் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவரைக் கையாளும் ஒரு நல்ல சமாரியர் அமைதியாகவும், மன உறுதியுடனும், என்ன நடக்கிறது என்பதை அறிந்தவராகவும் இருக்க வேண்டியது அவசியம். முதல் படி, விபத்து நடந்த இடத்தில் உங்கள் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விபத்துக்குள்ளானவர்களை நகராமல் அல்லது நடக்க வைக்காமல் உடனடி உதவியை நாட வேண்டும்.
தொழில்முறை உதவிக்காகக் காத்திருக்கும்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டால் தவிர, பாதிக்கப்பட்டவரை நகர்த்தாமல் ஆறுதல்படுத்த முயற்சி செய்யுங்கள்," பாதிக்கப்பட்டவரின் நிலையை தொடர்ந்து சோதித்துப் பாருங்கள். இரத்தப்போக்கு, சுவாசம், சுயநினைவு அல்லது ஏதேனும் கடுமையான காயம் போன்ற அறிகுறிகளை ஒருவர் சரிபார்க்க வேண்டும். உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படாவிட்டால், நீங்களே எந்த மருத்துவ சிகிச்சையையும் வழங்க முயற்சிக்காதீர்கள், ஏனெனில் அது நோயாளிக்கு ஆபத்தானது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் விவரங்களைப் பெற முயற்சிக்கவும், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவும், பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகளைக் கண்காணித்து, நிலையில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்று பார்க்கவும், ஏனெனில் இந்தத் தகவல் விபத்து நடந்த இடத்திற்கு வரும் மருத்துவ உதவி குழுவிற்கு மிக முக்கியமானதாக இருக்கும். "சம்பவ இடத்திற்கு வரும் மருத்துவக் குழுவிற்கு துல்லியமான தகவலை வழங்க முயற்சிக்கவும். பாதிக்கப்பட்டவர் நலமாக இருப்பார் என்று உறுதியளிக்கவும், விபத்துக்குள்ளானவர் விழித்திருந்து பதிலளிப்பதை உறுதிசெய்து, மேலும் பீதி மற்றும் குழப்பத்தைத் தடுக்கவும் என்று டாக்டர் தண்டேகர் கூறினார்.
டெல்லியின் சைக்கிள் மேயரும் சான்றளிக்கப்பட்ட போஷ் (POSH) பயிற்சியாளருமான தலீப் சபர்வால் கூறுகையில், நம்மில் பலர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டு உதவி வழங்குவதைத் தவிர்த்து வந்தாலும், அவர்களை உங்கள் சொந்த குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் போலக் கருதுவது அவசியம், ஏனெனில் அவர்கள் வேறு ஒருவருக்கு சமமாக முக்கியமானவர்கள். "பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தால், அவர்களின் காயங்களின் அளவை மதிப்பிடுவதற்கு அவர்களிடம் பேசுங்கள். இது உங்கள் அடுத்த நடவடிக்கைகளைத் தீர்மானிக்க உதவும்.
மாறாக அவர்கள் சுயநினைவின்றி இருந்தால், அவர்களின் காயங்களை "உங்கள் சொந்தமாக" கவனமாக அடையாளம் காணலாம். ஆனால் நீங்கள் அதை கவனிக்கும்போது, அவர்களின் காயங்கள், மேலும் மோசமாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். "உங்கள் முதன்மையான முன்னுரிமை எப்போதும் அவர்களை அருகிலுள்ள மருத்துவ வசதிக்கு கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முறையாகக் கையாள்வது அவர்களின் மீட்சியை கணிசமாக பாதிக்கும், சாத்தியமான தீங்கைக் குறைக்கும் மற்றும் உயிர் காக்கும் சரியான நேரத்தில் தலையீட்டைப் பெறுவதை உறுதிசெய்யும் என்று சபர்வால் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.