சென்னை கூவத்தூர் விவகாரம் தொடர்பான தன் மீது அவதூறு பரப்புவர்கபள் மற்றும் தன்னை பற்றி சர்ச்சை கருத்தை கூறும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் மரணமடைந்தார். இதனால் அ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பெரிய சர்ச்சை எழுந்த நிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும், சென்னை கூவத்தூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது எம்.எல்.ஏக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடிகைகள் பலர் வரவழைக்கப்பட்டதாகவும், இதில் நடிகை த்ரிஷாவும் ஒருவர் என்றும் கூறிய அ.தி.மு.க.முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ, நடிகர் கருணாஸ் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே தன்னை பற்றி அவதூறாக கருத்து கூறிய ஏ.வி.ராஜூ 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகைன த்ரிஷா ஏ.வி.ராஜூவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது தொடர்பான பதிவை த்ரிஷா தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கூவத்தூர் விவகாரத்தில் தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பியவர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்எ ன்று கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஷ் புகார் அளித்திருந்தார். இதனிடையே தற்போ மேலும் சில பெயர்களை இணைத்து புதிதாக ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார் நடிகர் கருணாஸ்.
இந்த மனுவில், யூடியூப் சேனல்கள் மூலம், தவறான தகவல்களை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூவத்தூரில் ‘நடிகை த்ரிஷா மற்றும் இன்னும் சில நடிகைகளையும் நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
என் மீது எந்த ஆதாரமுமின்றி பொய்யான தகவல் பரப்பி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் இந்த புகார் இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil