'ஓ.பி.எஸ் எனக்கு மஞ்சப் பையில பணம் கொடுத்தாரு..!' பயில்வான் உடைத்த சீக்ரெட்

தற்போது பத்திரிக்கையாளர் மற்றும் யூடியூப்ராக செயல்பட்டு வரும் இவர், சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க தகவல்களை கூறி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது பத்திரிக்கையாளர் மற்றும் யூடியூப்ராக செயல்பட்டு வரும் இவர், சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க தகவல்களை கூறி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
OPS Baylwan

பயில்வான் ரங்கநாதன் - ஒ.பன்னீர்செல்வம்

நான் தயாரித்த படத்திற்காக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மஞ்சப்பையில் எனக்கு பணம் கொடுத்தார் என்று பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

1983-ம் ஆண்டு பாக்யாராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பயில்வான் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து, தர்மதுரை, ஆவராம்பூ, ஆசை, தெனாலி, பம்மல் கே சம்மந்தம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது பத்திரிக்கையாளர் மற்றும் யூடியூப்ராக செயல்பட்டு வரும் இவர், சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க தகவல்களை கூறி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் புதிதாக வெளியாகும் படங்களின் விமர்சன்ஙகளையும் பதிவிட்டு வருகிறார். சினிமாத்துறையில் இவருக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வந்தாலும் பயில்வான் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பயில்வான் ரங்கநாதன், நான் ஒரு படம் தயாரித்திருக்கிறேன். அது பலருக்கும் தெரியாது. மகேந்திரன் இயக்கத்தில் வெளியான அந்த படத்திற்கு ஒரு அரசியல் தலைவர் எனக்கு பணம் கொடுத்தார். இந்த படத்திற்கு நான் தயாரிப்பாளர் என்பது பலருக்கு தெரியாது. அந்த படத்தின் பெயர் அழகிய கண்ணே.

Advertisment
Advertisements

இந்த படத்தை எடுப்பதற்காக எனக்கு ஒரு அமைச்சர் பணம் கொடுத்தார். அவர்தான் மகேந்திரனை இயக்குனராக வைத்து படம் இயக்க சொன்னார். அவருக்கு அந்த அமைச்சர்தான் அட்வான்ஸ் கொடுத்தார். அந்த அமைச்சரிடம் இருந்து மஞ்சப்பையில் எனக்கு பணம் கொடுத்தவர் அதன்பிறகு முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆமாம் ஓ.பன்னீசெல்வம் எனக்கு மஞ்சப்பையில் பணம் கொண்டு வந்து கொடுத்தார்.

இதை வைத்து அந்த பணம் கொடுத்த அமைச்சர் யார் என்று உங்களுக்கே தெரியும். இது சத்தியமான உண்மை. ஆனால் அதனபிறகு ஒரு பெரிய தாயாரிப்பாளராக நாம் வர முடியாது என்று முடிவு செய்து பத்திரிக்கையளராகவும் நடிகனாகவும் இருந்துவிட்டேடேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: