/indian-express-tamil/media/media_files/JbolzkOVesa4WaWb5INi.jpg)
அபியும் நானும் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், தற்போது அவர் நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.
2008-ம் ஆண்டு வெளியான அபியும் நானும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த இவர், பனித்துளி, தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராம், தற்போது ரெட் சாண்டல், உன் பார்வையில், வணங்காமுடி, தி டோர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் கணேஷ் வெங்கட்ராம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
அதேபோல் கண்ணான கண்னே தொடரின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த கணேஷ் வெங்கட்ராம், தாலாட்டு சீரியலில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது புதிதான தொடங்க உள்ள நினைத்தேன் வந்தாய் சீரியல் மூலம் முழு நேர சீரியல் நடிகராக அறிமுகமாக உள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகும் இந்த சீரியலில் கணேஷ் வெங்கட்ராம் நகரத்து இளைஞராக நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த சீரியலின் டைட்டிலை வெளியிட்டிருந்தது.
இதுவரை சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராம் தற்போது முழு நேர சீரியல் நடிகராக மாறியுள்ள நிலையில், சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.