Advertisment

காதல் என்ற வார்த்தை போதுமானதாக இல்லை : வித்தியாசமாக காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்

தேவராட்டம் படத்தில் இவர் நடித்தபோது அப்படத்தின் நடிகை மஞ்சிமா மோகனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

author-image
WebDesk
New Update
காதல் என்ற வார்த்தை போதுமானதாக இல்லை : வித்தியாசமாக காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்

நடிகர் கவுதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது இருவருமே தங்களது காதலை உறுதி செய்யும் வகையில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்

Advertisment

தமிழ் சினிமாவின் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமான கவுதம் கார்த்திக், அதன்பிறகு வை ராஜா வை, இவன் தந்திரன் ஹரஹர மகாதேவகி மிஸ்டர் சந்திரமௌலி தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வளர்ந்து வரும் இளம் நடிகரான வலம் வந்தார். தற்போது சிம்புடன் பத்து தல, ஆகஸ்ட் 16, 1947 உள்ளிட் படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே தேவராட்டம் படத்தில் இவர் நடித்தபோது அப்படத்தின் நடிகை மஞ்சிமா மோகனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக இருவருமே மௌனம் காத்து வந்தாலும், மஞ்சிமாவின் பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களுக்கு கவுதம் கார்த்திக் பதிவிட்ட வித்தியாசமான வாழ்த்துக்கள் இவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தியது.

குழந்தை நட்சத்திரமாக இருந்து ஒரு வடக்கன் செல்ஃபி என்ற மலையாளப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகன் சிம்புக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இதனிடையே தற்போது கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் தங்களது காதலை சமூகவலைதளங்களின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரொமான்ஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர உதவினாய்!! ஒவ்வொரு முறையும் நான் முழு குழப்பமாக இருக்கும்போது  நீங்கள் என்னை மேலே இழுக்கிறீர்கள். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நான் நானாக இருக்கவும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். நான் உன்னை நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான்! நீங்கள் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமானவராக இருப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில்,

சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்?பெரும்பாலானவர்கள் சொல்வார்கள், நீங்கள் அவர்கள் மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள், உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் உங்கள் வயிறு உணரும்

எங்கள் பயணம் நிச்சயமாக வித்தியாசமானது, ஒருவரையொருவர் கேலி செய்வதன் மூலம் தொடங்கிய எங்கள் பயணம், எப்போதும் சச்சரவு செய்துகொண்டு, முட்டாள்தனமான விஷயங்களைப் பற்றி வாதிடுகிறோம். எங்கள் நண்பர்களால் கூட எங்கள் வாதங்களைத் தாங்க முடியவில்லை. ஆனால் நீங்கள் எங்களிடையே ஒரு அழகான பந்தத்தை உருவாக்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

இந்த பந்தத்திற்கு முதலில் 'நட்பு' என்று பெயர் வைக்க முடிவு செய்தேன். ஆனால் அதைவிட வலிமையாக இருந்தது. நீங்கள் அதை வளர்த்துக் கொண்டே இருந்தீர்கள். அதற்கு நான் 'சிறந்த நண்பர்கள்' என்று பெயரிட்டேன். ஆனால் அதையும் விட பலமாக வளர்ந்தது. தினமும் அதை வளர்த்து கொண்டே இருந்தீர்கள். நாளுக்கு நாள் அதை வலுவாக வளர்த்தீர்கள். இதில் நான் நம்பியதை விட நீங்கள் என்னை நாளுக்கு நாள் வலிமையாகவும் வலுவாகவும் ஆக்கியுள்ளீர்கள்.

நான் மோசமான நிலையில் இருந்தபோது நீங்கள் என் பக்கத்தில் நின்றீர்கள், நான் யாராக இருக்க முடியும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. நீங்கள் எப்போதும் என்னை வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல உதவுகிறீர்கள். என்னை விட்டுக்கொடுக்க விடமாட்டீர்கள், எப்போதும் எனக்காக நேர்மறையாக இருக்கிறீர்கள், என் சுயத்தையோ அல்லது என் சுய மதிப்பையோ சந்தேகிக்க விடாமல் இருக்கிறீர்கள்.

இதுவரை நான் உணராத ஒரு அமைதி இப்போது என் இதயத்தில் இருக்கிறது, என் வாழ்க்கையில் நீங்கள் ஊட்டியிருப்பதால் தான். நீங்கள் எங்களுக்காக ஏற்படுத்திய பிணைப்பை விவரிக்க 'காதல்' என்ற வார்த்தை கூட போதுமானது என்று நான் நம்பவில்லை. நீ என் பக்கத்தில் இருந்தால், வாழ்க்கை என் மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியும்.

இந்த சிறப்பு பந்தத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பை நான் சம்பாதித்து, கடைசி வரை இந்த பந்தத்தை வளர்த்து, வருவதை உறுதி செய்வதன் மூலம் இப்போது என் பங்கைச் செய்கிறேன்! நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Gautham Karthik Manjima Mohan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment