Advertisment
Presenting Partner
Desktop GIF

விவாகரத்து வேண்டாம்: சேர்ந்து வாழ விரும்புகிறேன்; ஜெயம் ரவி மனைவி திடீர் பதிவு!

தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று ஜெயம் ரவி விண்ணப்பித்துள்ள நிலையில், விவாகரத்துக்கு நான் சம்மதிக்கவில்லை என்று ஆர்த்தி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Jayam Aarthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், பரஸ்பர விவாகரத்துக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று ஆர்த்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜோடி ஜெயம்ரவி ஆர்த்தி. மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த ஜெயம்ரவி, அதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார்.

அதேபோல், ஜெயம் ரவி ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அவரை என்னால் சந்திக்கவும் முடியவில்லை. குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று அவரது மனைவி ஆர்த்தி கூறியிருந்தார். இதனிடையே ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது பொருட்களை மீட்டு தரக்கோரி, காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இதனிடையே சமீபத்தில் பிரபல யூடியூபர் ஆர்.ஜே.ஷா –வை அழைத்து பேசிய ஜெயம் ரவி நாம் பிரிந்துவிடலாம் என்று ஆர்த்திக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பினேன். அவரும் கையெழுத்து போட்டு அதை வாங்கிக்கொண்டார். அதன்பிறகுததான் நான் என் முடிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டேன். அதன்பிறகு எனக்கு விவாகரத்தே தெரியாது. என் குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டார் ஜெயம்ரவி என்று கூறியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே தற்போது ஆர்த்தி, தான் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தான் ஜெயம்ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான அவரை தனியாக சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து ஆர்த்தி தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியுள்ள பொதுக் கருத்துகளின் வெளிச்சத்தில், எனது மௌனம் பலவீனம் அல்லது குற்ற உணர்வின் அடையாளம் அல்ல என்பதை விளக்குவது முக்கியம். நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் முடிவு செய்துள்ளேன், ஆனால் நீதி வழங்கும் சட்ட அமைப்பை நான் நம்புகிறேன்.

தெளிவாகச் சொல்வதானால், எனது முந்தைய அறிக்கை பரஸ்பர ஒப்புதலின் மூலம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது நடந்து கொண்டிருப்பது பரஸ்பர விவாகரத்துக்கான நடவடிக்கை அல்ல என்று நான் கூறுகிறேன். எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. நான் அவரை தனியாக சந்தித்து பேச விரும்புகிறேன்.

நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வில் உள்ளது, மேலும் வழிகாட்டுதலுக்கான கடவுளின் கிருபையை நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jayam Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment