/indian-express-tamil/media/media_files/obh2gxOGdAAlSYucPIF5.jpg)
கே.பி.ஒய் பாலா
விஜய் டிவியில் தொடங்க உள்ள புதிய ரியாலிட்டி ஷோவின் மூலம் கே.பி.ஒய் பாலா ரீ-என்ட்ரி ஆக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பாலா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருப்பது விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும், ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நிகழ்ச்சியும், 2 அல்லது 3 சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல நட்சத்திரங்கள் சினிமாவிலும் சீரியலிலும் என்ட்ரி ஆகியுள்ளனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கே.பி.ஒய்.பாலா. அந்நிகழ்ச்சியில் அவர் கொடுத்த டைமிங் கவுண்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பாலாவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.
இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான பாலா, ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ரியாலிட்டி ஷோவுக்கு திரும்ப உள்ளார். சமீப காலமாக மக்களுக்கு உதவி செய்து வரும் பாலா, சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் தன்னால் முடிந்த அளவுக்கு அனைவருக்கும் உதவி செய்து வரும் பாலா, மலைகிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் பாலா, தற்போது விஜய் டிவியில் புதிதாக தொடங்க உள்ள ரியாலிட்டி ஷோவின் மூலம் மீண்டும் விஜய் டிவியில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு டிக் டிக் டிக் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், பாலாவுடன் இணைந்து, நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி தொகுத்து வழங்க உள்ளதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.