Advertisment

ஆதி குணசேகரனாக மாரிமுத்துவின் கடைசி வார்த்தைகள்... எதிர்நீச்சல் சீரியல் என்ன நடந்தது?

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து நேற்று இறந்துவிட்ட நிலையில், அவர் கடைசியாக பேசிய வசனங்கள் குறித்த எபிசோடு இணையத்தில் வைரலாகி வருகிறது

author-image
WebDesk
New Update
Maarimuthu

எதிர்நீச்சல் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாட்களாக குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து நேற்று திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், அவர் கடைசியாக பேசிய டப்பிங் டயலாகுகள் நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது.

Advertisment

எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோட்டில், சக்தியும் ஜனனியும் புதியதாக தொடங்க உள்ள தொழில் பற்றி விசாலாட்சியிடம் சொல்கின்றனர்.  இதை கேட்டு கோபமான குணசேகரன் எனக்கு எதிரா வீட்டிலேயே பிரச்சனை செய்தது பத்தாதுனு எனக்கு எதிரா தொழில் தொடங்க போறீங்களா? என்று கேட்டு சத்தம் போடுகிறார்.

தொடர்ந்து ஞானமும் சக்தி இடம் உனக்கு என்ன தெரியும்னு இப்ப தொழில் தொடங்கப்போறா? உன்னால நிர்வாகம் பண்ண முடியுமா? யாருடைய பெயரில் தொழில் தொடங்கப்போற? என்று கேள்வி கேட்க உண்மையை சொல்லு சக்தி என்று ஜனனி சொல்ல, ஜனனி பெயரில் தான் தொழில் தொடங்க போகிறோம் நாங்கள் தான் நிர்வாகம் செய்ய போகிறோம் என்று சொல்கிறார். அதைக் கேட்டு கோபமான குணசேகரன் தொழில் தொடங்க முதல் பணம் எங்கிருந்து வந்தது? என்று கேட்கிறார்.

அதற்கு கதிர் அந்த கிழவி அதான் நம்ம கிட்ட இருந்து பிடுங்கி இதுகளுக்கு கொடுத்து இருப்பா என்று சொல்ல, அப்போது விசாலாட்சி பொறுமை இழந்து நான்தான்பா என்னுடைய நகைகளை கொடுத்து தொழில் தொடங்க சொன்னேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ஷாக்கான, குணசேகரன் நான் என் சொந்த உழைப்பில் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உனக்கு நகை நட்டு போட்டு அழகு பார்த்தா நீ அதை தூக்கிக் கொடுப்பியா என்று கேள்வி கேட்கிறார்.

இந்த நகைகள் என்னுடைய அம்மா எனக்கு கொடுத்த நகை என்று என்று விசாலாட்சி சொல்ல, அதற்கு குணசேகரன் எனக்கு நீ இதுவரைக்கும் ஏதாவது செஞ்சு இருப்பியா? ஒரு அர்னா கொடி கூட நீ வாங்கி போட்டு அழகு பார்த்தது கிடையாது என்று குணசேகரன் திட்ட, விசாலாட்சி உன்னை பத்து மாசம் சுமந்து பெக்கலயா? நீ கஷ்டப்படும்போது நானும் உனக்கு உறுதுணையா தானே இருந்தேன். உன் நோய் நொடி எல்லாம் பார்த்து வளர்த்து விட்டேன்.

அதையெல்லாம் எப்பவாவது நான் சொல்லி காட்டி இருக்கனா? என்று கேட்க, அப்போ நான் சொல்லி காட்டுனதுனால நான் கெட்டவன் என்று நீ சொல்றியேமா அப்போ உன் கையால என்னை கொன்னுடு என்று கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதற்கு இதை கேட்டு ஜனனி அம்மாவின் நகைகளை திரும்பி கொடுத்துவிடுமாறு சக்தியிடம் கூறுகிறார். உடனே சக்தியும் நகைகளை திருப்பி கொடுக்க விசாலாட்சி வாங்க மறுக்கிறார்.

அதைத்தொடர்ந்து குணசேகரனிடம் நீ சம்பாதிச்ச சொத்தை கொடுத்தால் தான் தப்பு ஆனா இது என்னுடைய அம்மா எனக்கு போட்ட நகை. இதை நான் விருப்பப்பட்டவர்களுக்கு கொடுக்க எனக்கு உரிமை இருக்கு. என்னை யாருமே இந்த வீட்ல மதிக்கவே மாட்டேங்கிறீங்க என்ன இப்படி கொடுமை படுத்துவதற்கு பதில் என்னை உன் கையாலே கொன்னுடு என்று விசாலாட்சி அழுது கொண்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் ஞானம் ஜனனி உன்னை நடு தெருவில் விட்டுட்டு போவா. அப்பதான் அண்ணன்களோட அருமை உனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

இதை கேட்டு சக்தி அப்பக்கூட நான் என்னோட சொந்த கல்லில் தான் இருப்பேன். வசதியாக வாழ வேண்டும் என்று உன்னை மாதிரி இவங்களோட ஒட்டிக்கிட்டு இருக்க மாட்டேன். அவங்களோட சுயரூபம் தெரிஞ்சா தான் நீ திருந்துவ என்று கோபத்தில் பேசுகிறார். அதற்கு கதிரும் சக்தியிடம் சண்டைக்கு வர உடனே சக்தி, சீ வாய மூடு. நீ செஞ்ச கிரிமினல் வேலையெல்லாம் சொன்னா நீ நாண்டுக்கிட்டு தான் சாவா என்கிறார்.

அதற்கு கதிர் நான் என்ன செஞ்சுட்டேன்? எனக்கு கேட்க, அதற்கு நந்தினி அது அவங்க மனசாட்சிக்கு தெரியும் என்று சொல்ல, அதற்கு குணசேகரன் நான் முடிவா சொல்றேன் இந்த வீட்ல ஆதி குரூப் ஆப் கம்பெனி மட்டும் தான் இருக்கணும் என்று பேசுகிறார் அத்துடன் முடிகிறது எபிசோடு

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment