Advertisment

'கற்பழித்தேனா? கொலை செய்தேனா? நான் ஏன் தலை மறைவு ஆகணும்?' மன்சூர் அலிகான் கேள்வி

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது எப்படி திசை திருப்புகிறார்கள். நான் எல்லா பிரச்சனைகளையும் முன் வைத்து ஒவ்வொரு ஸ்டேட்லயும் இப்படித்தான் இந்த நடுவன் அரசாங்கம் கைக்கூலிகளை அமர்த்தி இதை பண்ணிக்கிட்டு இருக்காங்க.

author-image
WebDesk
New Update
saagt

நடிகர் மன்சூர் அலிகான்

நிஜமாகவே யாரையாவது கற்பழித்தவிட்டேனா அல்லது கொலை செய்துவிட்டேனா எதற்காக நான் தலைமறைவாக வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலி கான் பேசிய ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் மற்றும் காமெடி நடிகராக இருந்து வரும் மன்சூர் அலிகான். சமீபத்தில் வெளியான விஜயின் லியோ படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று சொன்னவுடன், அவருடன் பெட்ரூம் சீன் இருக்கும் ரோஜா மற்றும் குஷ்புவை தூக்கி பெட்டில் போட்ட அவரையும் போடலாமா என்று நினைத்தேன். இப்போதெல்லாம் பலாத்கார காட்சியே படங்களில் வைக்கப்படுவதில்லை. 150 படங்களில் நான் பார்க்காத ரேப்பா என்று கூறியிருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதனிடையே நடிகை த்ரிஷா வெளியிட்டிருந்த பதிவில், மன்சூர் அலிகானுடன் இதுவரை நடிக்காததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும் அவருடன் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து மன்சூர் அலிகான் வெளியிட்ட பதிவில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என பலரும் மன்சூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தனர். தொடர்ந்து மன்சூர் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மகளிர் ஆணையம் அவரிம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மன்சூர் அலிகான் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் இருந்து எனக்கு கடிதம் வந்தது. இன்றைக்கு ஆஜராக இருந்தது ஆனால் நான் உடல்நிலை சரியில்லை நாளை வருகிறேன் என்று கடிதம் அனுப்பிவிட்டேன். அது பற்றிய செய்திகளும் வந்துவிட்டது. ஆனால் சிலர் வன்மம் தீர்ப்பதற்காக எனக்கு போன் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை போன் தான் அட்டன் பண்ண முடியும்.

இவர்கள் தொல்லை தாங்காமல் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தால் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். பூட்டிய என் அலுவலகத்தை போட்டோ எடுத்து போட்டு மன்சூர் அலிகான் தலைமறைவு என்று சந்தோஷ செய்தியை பரப்புகிறார்கள். தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது எப்படி திசை திருப்புகிறார்கள். நான் எல்லா பிரச்சனைகளையும் முன் வைத்து ஒவ்வொரு ஸ்டேட்லயும் இப்படித்தான் இந்த நடுவன் அரசாங்கம் கைக்கூலிகளை அமர்த்தி இதை பண்ணிக்கிட்டு இருக்காங்க.

நான் எதற்காக தலைமறைவாக வேண்டும் நிஜமாவே யாரையாவது கற்பழித்துவிட்டேனா, அல்லது கொலை செய்துவிட்டேனா? எதற்காக இப்படி ஆனந்த புலகாகிதம் அடையிறீங்க. நான் தலைமறைவாக வில்லை என்பதை தெரியப்படுத்துங்க நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார். மன்சூர் அலிகானின் இந்த ஆடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mansoor Ali Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment