விமான பயணத்தின்போது ஒரு பெண் ரசிகை தனது தாலியை எடுத்து காட்டியபோது அதில் இருந்த புகைப்படத்தை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகில் இப்படியும் கணவர் இருப்பாரா என்று எனக்கு தோன்றியது என நடிகர் மைக் மோகன் கூறியுள்ளார்.
தமிழில் வெள்ளிவிழா நாயகன் என்ற அடையாளத்துடன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் மோகன். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கொகிலா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், மோகன் கோகிலா மோகன் என்று அழைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழில், 1980-ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மோகன், அடுத்து நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், கோபுரங்க்ள சாய்வதில்லை, நூறாவது நாள், இதய கோவில், மௌனராகம், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த மோகன்’, 1980-களில் ஒரே ஆண்டில் 10 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் ஸ்கிரீனில் வந்தாலே இந்த படம் வெள்ளிவிழா கொண்டாடிவிடும் என்ற நிலை இருந்த காலக்கட்டத்தில், ரஜினிகாந்த் கமல்ஹாசன் என முக்கணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்தவர் மோகன். பெரும்பாலும் தனது படங்களில் இவர் மைக் எடுத்து பாடினால் அனைத்து பாடல்களும் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட இவருக்கு நோய் தொற்று இருப்பதாக சிலர் பரப்பிய தகவல்கள் காரணமாக பட வாய்ப்பு குறைந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்து தோல்வியை சந்தித்த மோகன், அடுத்து படங்களில் நடிக்காத நிலையில், தற்போது ஹரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மோகன், தற்போது பல யூடியூப் செனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அந்த வகையில் ஒரு பேட்டியில், தான் ஒரு விமான பயணத்தின்போது ஒரு பெண்ணை சந்தித்த கதையை கூறியுள்ளார். ஒருமுறை மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒரு பெண் ரசிகை என்னை சந்தித்தார். அப்போது அவருடன் அவரது மகனும் இருந்தார், அந்த பெண் ரசிகை என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது மகன், அம்மா அதை அவரிடம் காட்டு என்று சொல்ல, அந்த ரசிகை தனது தாலியில் உள்ள லாக்கெட்டை எடுத்து காட்டினார்.
அந்த லாக்கெட்டில் எனது படம் இருந்துது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் உங்களின் தீவிர ரசிகை. இது பற்றி எனது கணவரிடம் சொன்னேன். அவரும் இந்த லாக்கெட்டை போட்டுக்கொள் என்று சொன்னார். நான் சாகும்வரை இந்த லாக்கெட்டை போட்டுக்கொண்டு இருப்பேன் என்று அந்த பெண்மணி சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எநத கணவனும் அடுத்தவர் படத்தை தாலியில் வைக்க விடமாட்டார். இப்படிப்பட்ட ரசிகர்களால் தான் நான் திரைத்துறையில் நிலைத்திருக்கிறேன் என்று மோகன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“