/indian-express-tamil/media/media_files/ZRE10WXP3AYi7ol7zxTh.jpg)
அண்ணா சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக அண்ணா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் 2 நடிகர்கள் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதனால் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஏறக்குறைய அனைத்து சீரியல்களுமே ஒரே மாதியான கதைக்களத்துடன் தான் ஒளிபரப்பி வருகிறது. இதில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சீரியலை எடுத்துக்கொண்டால், சன்டிவியின் வானத்தைப்போல, அதன்பிறகு ஜீ தமிழின் அண்ணா.
இதில் அண்ணா சீரியல் ஜீ தமிழின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சீரியல். 4 தங்ககளுக்கு அண்ணாக இருக்கும் ஹீரோ அம்மா இல்லாத தனது தங்கைகளை எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் என்பதே இந்த சீரீயலின் திரைக்கதை. இதில் தற்போது அம்மாவை பற்றி புரிந்துகொள்ளும் மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் அம்மா மீது விழுந்த பழியை துடைப்பேன் என்று சபதம் எடுத்தள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிர்ச்சி செந்தில், நித்யா ராம், ரொசாரியோ, பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில், நாயகனாக மிர்ச்சி செந்தில், நாயகியாக நித்யா ராம் நடித்து வருகின்றனர். தினசரி எப்சோடுகள் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மிர்ச்சி செந்திலின் ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருந்து வருகிறது. அதேபோல் கணவனை புரிந்துகொண்ட நித்யா ராமும் கவனம் ஈர்த்து வருகிறார்.
இதனிடையே தற்போது அண்ணா சீரியலில் இருந்து, மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் ஆகிய இருவருமே விலக உள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த தகவல் பொய்யானது என்றும், மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் ஆகிய இருவரும் தொடர்ந்து சீரியலில் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.