/indian-express-tamil/media/media_files/x3ULPqljxlKekMfJkktI.jpg)
ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கு பெரிய வெற்றியை கொடுத்த முனி சீரிஸ் படங்களை கைவிடாத இயக்குனர் ராகவா லாரன்ஸ் தற்போது இந்த படத்தின் 5-ம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரனஸ். குருப் டான்சராக வாழ்க்கையை தொடங்கிய இவர், 1999-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்பீடு டான்சர் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில்,உன்னைக்கொடு என்னை தருவேன், பார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2002-ம் ஆண்டு தமிழில் வெளியான அற்புதம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், அடுத்து, ஸ்டைல் என்ற படத்தில் நடித்திருந்தார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்த இவர், அடுத்து 2007-ம் ஆண்டு முனி படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பே தெலுங்கில், 2004-ல் மாஸ், 2006-ல் ஸ்டைல் என இரு படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
முனி படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து, 2011-ம் ஆண்டு இந்த படத்தின் 2-ம் பாகமாக காஞ்சனா என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், 2015-ல் காஞ்சனா 2, 2019-ல் காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கி பெரிய வெற்றியை கண்ட லாரன்ஸ், தற்போது காஞ்சனா படத்தில் 4-ம் பாகம் (முனி 5) இயக்க தயாராகி வருகிறார்.
தனது ராகவேந்திரா நிறுவனத்தின் மூலம் லாரன்ஸ் தயாரித்து இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த தீபாவளி தினத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் லாரன்ஸ்க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து அவர் ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படததில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.