New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Rajinikanth.jpg)
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த்
பாபு ராஜேந்திரன்
லால் சலாம் படப்பிடிப்பிற்காக கடந்த ஐந்து நாட்களாக திருவண்ணாமலையில் தங்கி இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்றுடன் தனது போர்ஷனை முடித்துவிட்டதை தொடர்ந்து இன்று அருணாசலேஸ்வரர் ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி என்று கூறப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். இதனால் அந்த கோயிலில் அவரை பார்ப்பதற்காக கூட்டம் கோவிலில் அலை மோதியதால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
லால் சலாம் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். புதுச்சேரி திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் தனது போர்ஷனில் நடித்து வந்த ரஜினிகாந்த் கடந்த மாதம் புதுச்சேரியில் 15 நாட்கள் சூட்டிங் நடைபெற்ற படப்பிடிப்பில் நடித்திருந்தார். புதுவையிலும் அவரைக் காண மணிக்கணக்காக ரசிகர்கள் காத்திருந்து பார்த்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக திருவண்ணாமலை கோவில் சுற்றி கிரிவல பாதை பகுதியில் ரஜினிகாந்த் நடிக்கும் போஷன் படமாக்கப்பட்டது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் இன்றுடன் முடிந்ததால் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தார் அவருடன் சிவாச்சாரியார்கள் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்பு வெளியே வந்து ரசிகர்களிடம் வணக்கம் தெரிவித்து ரசிகர்களை பார்த்து கை அசைத்து சென்றார். அவரைப் பார்க்க ஏராளமானவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.