Advertisment

வேட்டையனை முடித்த ரஜினிகாந்த் : கூலி படத்துக்கு பின் அடுத்த படம் என்ன? நியூ அப்டேட் வைரல்!

வேட்டையன் படத்தை வெற்றிகராமாக முடித்த ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Hukum

ரஜினிகாந்த்

வேட்டைன் படத்தை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக ரஜினிகாந்த், தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். குறிப்பாக இளம் இயக்குனர்களின் கதையில் நடித்து வரும் ரஜினிகாத்த், கடந்த ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரகடரில் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தில், தமன்னா ஆடிய ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் மலையாள நடிகர் விநாயகன் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் இன்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது. பாடல்களும் இந்த படத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைக்கும் நிலையில், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேட்டையன் படத்தை வெற்றிகராமாக முடித்த ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆகியுள்ள நிலையில், ரஜினிகாந்துடன் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கூலி படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதற்கு விடை சொல்லும் விதமாக ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் இந்த படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment